கண்ணிற் கழகிய காரிகை வந்தாள் --அந்த
கனி மலர்ச் சோலையில் காற்றாய் நுழைந்தாள்
பெண்ணில் அவள் தான் பேரெழில் என்பேன் --நான்
தன்னை யிழந்தேன் தவியாய்த் தவித்தேன்
உள்ளம் மயங்குது என் உடலும் துடிக்குது --மனதில்
கள்ளம் பிறந்தது ஒரு காதல் சுரந்தது
கொல்லும் அழகினள் கோவை இதழினள் --உயிரை
கொல்ல வந்திட்ட குமரி யிவள் யாரோ
பேசிடத் தயக்கம் அதன் பின்னால் மயக்கம் ==வீண்
ஆசை வந்து எனோ ஆணினை வாட்டும்
தூசெனத் தள்ளிச் செல்வாளோ பெண்ணாள் --இல்லை
துள்ளும் இளமையோடு என்னையும் அள்ளிக்கொள்வாளோ
காலம் பறக்குது நடுவில் என்கால்கள் வலிக்குது --அந்த
கோல முகத்தினள் எந்தனைக் கொஞ்ச இசைவாளோ
வேளை வருமென்று விரும்பியே அங்கு நின்றேன் --எனோ
கொள்ளை அழகினள் தன குமுத வாய் திறக்க வில்லை
என்ன வேண்டுமென இசைவுடன் நான் கேட்டேன் --அதற்கு
பொன் நிற முகத்தாளோ மெல்லிய புன்னகை பூத்தாள்
சொன்ன மொழி மறந்து அந்த சுந்தரி நின்றாளோ --பின்னர்
என்ன செய்வது என்று ஏக்கமுடன் நான் இருந்தேன்
பத்து வயதுடைய ஒரு பள்ளி சிறுமி வந்தாள் --அவள்
கைசாடையாலே அந்தக் கன்னியிடம் கேட்டாள்
பின்னர் தான் அறிந்தேன் என்னவள் பேசா மடந்தையென --அதனால்
அவளையே மணந்து அன்புடன் நாங்கள் வாழுகிறோம்
கனி மலர்ச் சோலையில் காற்றாய் நுழைந்தாள்
பெண்ணில் அவள் தான் பேரெழில் என்பேன் --நான்
தன்னை யிழந்தேன் தவியாய்த் தவித்தேன்
உள்ளம் மயங்குது என் உடலும் துடிக்குது --மனதில்
கள்ளம் பிறந்தது ஒரு காதல் சுரந்தது
கொல்லும் அழகினள் கோவை இதழினள் --உயிரை
கொல்ல வந்திட்ட குமரி யிவள் யாரோ
பேசிடத் தயக்கம் அதன் பின்னால் மயக்கம் ==வீண்
ஆசை வந்து எனோ ஆணினை வாட்டும்
தூசெனத் தள்ளிச் செல்வாளோ பெண்ணாள் --இல்லை
துள்ளும் இளமையோடு என்னையும் அள்ளிக்கொள்வாளோ
காலம் பறக்குது நடுவில் என்கால்கள் வலிக்குது --அந்த
கோல முகத்தினள் எந்தனைக் கொஞ்ச இசைவாளோ
வேளை வருமென்று விரும்பியே அங்கு நின்றேன் --எனோ
கொள்ளை அழகினள் தன குமுத வாய் திறக்க வில்லை
என்ன வேண்டுமென இசைவுடன் நான் கேட்டேன் --அதற்கு
பொன் நிற முகத்தாளோ மெல்லிய புன்னகை பூத்தாள்
சொன்ன மொழி மறந்து அந்த சுந்தரி நின்றாளோ --பின்னர்
என்ன செய்வது என்று ஏக்கமுடன் நான் இருந்தேன்
பத்து வயதுடைய ஒரு பள்ளி சிறுமி வந்தாள் --அவள்
கைசாடையாலே அந்தக் கன்னியிடம் கேட்டாள்
பின்னர் தான் அறிந்தேன் என்னவள் பேசா மடந்தையென --அதனால்
அவளையே மணந்து அன்புடன் நாங்கள் வாழுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக