வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கவிதையில் ஒரு கதை 558

 கண்ணிற்   கழகிய   காரிகை   வந்தாள்  --அந்த
 கனி மலர்ச்   சோலையில்   காற்றாய்   நுழைந்தாள்
 பெண்ணில்  அவள் தான்  பேரெழில்   என்பேன்  --நான்
 தன்னை   யிழந்தேன்  தவியாய்த்   தவித்தேன்

 உள்ளம்  மயங்குது   என்  உடலும்   துடிக்குது --மனதில்
 கள்ளம்  பிறந்தது    ஒரு  காதல்   சுரந்தது
  கொல்லும்  அழகினள்   கோவை  இதழினள் --உயிரை
  கொல்ல  வந்திட்ட   குமரி   யிவள்   யாரோ

பேசிடத்   தயக்கம்   அதன்  பின்னால்   மயக்கம் ==வீண்
 ஆசை  வந்து   எனோ   ஆணினை   வாட்டும்
 தூசெனத்   தள்ளிச்    செல்வாளோ  பெண்ணாள்  --இல்லை
 துள்ளும்  இளமையோடு  என்னையும்  அள்ளிக்கொள்வாளோ

 காலம்  பறக்குது  நடுவில்  என்கால்கள்   வலிக்குது --அந்த
 கோல  முகத்தினள்  எந்தனைக்  கொஞ்ச   இசைவாளோ
 வேளை  வருமென்று  விரும்பியே  அங்கு   நின்றேன்  --எனோ
 கொள்ளை   அழகினள்   தன   குமுத  வாய்   திறக்க  வில்லை

 என்ன  வேண்டுமென   இசைவுடன்   நான்  கேட்டேன்  --அதற்கு
 பொன்   நிற   முகத்தாளோ    மெல்லிய   புன்னகை  பூத்தாள்
 சொன்ன  மொழி  மறந்து   அந்த   சுந்தரி   நின்றாளோ  --பின்னர்
 என்ன செய்வது   என்று   ஏக்கமுடன்   நான்   இருந்தேன்

 பத்து  வயதுடைய  ஒரு    பள்ளி சிறுமி   வந்தாள் --அவள்
 கைசாடையாலே   அந்தக்    கன்னியிடம்   கேட்டாள்
 பின்னர்  தான்   அறிந்தேன்  என்னவள்  பேசா  மடந்தையென  --அதனால்
 அவளையே    மணந்து  அன்புடன்    நாங்கள்    வாழுகிறோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக