வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

தீபங்கள் 572

நிலவில்   திண்டாடித்   திரிவேன்  --உன்னை
நெஞ்சில்    எந்நாளும்   சுமப்பேன்
பழகவே    வந்தாலும்    மகிழ்வேன்  --எனது
பாவை    உன்னை நான்   மறவேன்

நீயென்ன   சொன்னாலும்   இனிமை  --நீ
இறைவன்  செய்திட்ட    பதுமை
கண்ணால்  அழைப்பதும்   புதுமை  --பலரை
கவர்ந்து   இழுக்கின்ற   திறமை

கரும்பாய்   இனிக்கின்ற    பருவம்  ---பிறர்
கண்டால்   மயக்கமுறும்    உருவம்
அரும்பாய்  சிரிக்கின்ற   அழகே  ---என்
ஆசை     எந்நாளும்    உனக்கே

இரவைப்    பொன்னாக    மாற்று  --எனது
இல்லத்தில்   தீபங்கள்      ஏற்று
உறவைப்   பெரிதாக    எண்ணு  ---நீ
உயிருக்கு   மேலான  கண்ணு

சிரித்துக்   கொல்லாதே   என்னை --நீயோ
சீராய்      வளர்ந்துள்ள    தென்னை
பறித்துப்  பசியாற   வரவா    --உரிய
பதிலைச்  சொல்லிவிடு    உறவாய்

இருந்தால்   உன்னோடு    இருப்பேன் ---நீ
இல்லையெனில்  எங்கேயோ   பறப்பேன்
விருந்தாய்   வந்து விடு    பெண்ணே ---நல்ல
விவரம்     சொல்லிவிடு   கண்ணே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக