நிலவில் திண்டாடித் திரிவேன் --உன்னை
நெஞ்சில் எந்நாளும் சுமப்பேன்
பழகவே வந்தாலும் மகிழ்வேன் --எனது
பாவை உன்னை நான் மறவேன்
நீயென்ன சொன்னாலும் இனிமை --நீ
இறைவன் செய்திட்ட பதுமை
கண்ணால் அழைப்பதும் புதுமை --பலரை
கவர்ந்து இழுக்கின்ற திறமை
கரும்பாய் இனிக்கின்ற பருவம் ---பிறர்
கண்டால் மயக்கமுறும் உருவம்
அரும்பாய் சிரிக்கின்ற அழகே ---என்
ஆசை எந்நாளும் உனக்கே
இரவைப் பொன்னாக மாற்று --எனது
இல்லத்தில் தீபங்கள் ஏற்று
உறவைப் பெரிதாக எண்ணு ---நீ
உயிருக்கு மேலான கண்ணு
சிரித்துக் கொல்லாதே என்னை --நீயோ
சீராய் வளர்ந்துள்ள தென்னை
பறித்துப் பசியாற வரவா --உரிய
பதிலைச் சொல்லிவிடு உறவாய்
இருந்தால் உன்னோடு இருப்பேன் ---நீ
இல்லையெனில் எங்கேயோ பறப்பேன்
விருந்தாய் வந்து விடு பெண்ணே ---நல்ல
விவரம் சொல்லிவிடு கண்ணே
நெஞ்சில் எந்நாளும் சுமப்பேன்
பழகவே வந்தாலும் மகிழ்வேன் --எனது
பாவை உன்னை நான் மறவேன்
நீயென்ன சொன்னாலும் இனிமை --நீ
இறைவன் செய்திட்ட பதுமை
கண்ணால் அழைப்பதும் புதுமை --பலரை
கவர்ந்து இழுக்கின்ற திறமை
கரும்பாய் இனிக்கின்ற பருவம் ---பிறர்
கண்டால் மயக்கமுறும் உருவம்
அரும்பாய் சிரிக்கின்ற அழகே ---என்
ஆசை எந்நாளும் உனக்கே
இரவைப் பொன்னாக மாற்று --எனது
இல்லத்தில் தீபங்கள் ஏற்று
உறவைப் பெரிதாக எண்ணு ---நீ
உயிருக்கு மேலான கண்ணு
சிரித்துக் கொல்லாதே என்னை --நீயோ
சீராய் வளர்ந்துள்ள தென்னை
பறித்துப் பசியாற வரவா --உரிய
பதிலைச் சொல்லிவிடு உறவாய்
இருந்தால் உன்னோடு இருப்பேன் ---நீ
இல்லையெனில் எங்கேயோ பறப்பேன்
விருந்தாய் வந்து விடு பெண்ணே ---நல்ல
விவரம் சொல்லிவிடு கண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக