திங்கள், 13 ஆகஸ்ட், 2018

குமுதம் 561

கண்ணான  கவிதையே   காற்றிலாடும்  குமுதமே  --இங்கு
உன்னில்   நானும்   என்னில்   நீயும்  தான்  உலகமே
உண்மையான   அன்பிலே  உயர்வுகள்  அடையலாம்  --நாம்
இருவர்   கூட   ஒருவராகி  புதிய   இன்பலோகம்  போகலாம்

நானும்   வெள்ளை   நீயும்  வெள்ளை  நமது  இன்பம்  கொள்ளையே  --தினம்
தேனும்  பாலும்   சேரச்  சேர    நம்முள்    தேனாறு   பாயுமே
தேடித்  தேடி   யன்பில்   கூடும்   திரு  விளையாடல்  கொஞ்சமா  --என்
தேவி  உந்தன்  வாசல்   தேடி    தெண்டம்  போடும்  பக்தன்  நான்

வாழ்வு  யாவும்  இருவர்  சேர்ந்து   வசந்தம்  போல   வாழுவோம் --உன்னை
வாரி  யணைத்து   மடியில்   வைத்து  எனது   வல்லமையைக்  காட்டுவேன்
வர்ண  ஜாலம்  காட்டி  உன்னை  அஜந்தா   ஓவியமாய்த்   தீட்டுவேன்  --இனி
வந்து  விட்டால்  எந்த   நாளும்   நாமும்  வசந்த   கீதம்   பாடலாம்

பெண்ணால்   வந்த   பெருமையே  பேச்சு  மிகவும்  அருமையே -இங்கு
என்னில்  பாதி   என்பதாலே   எனக்கு  உன்மேல்   பிரியமே
அன்பு   காட்டி   வாழ்வதாலே   அதிக   காலம்   வாழலாம் --எனது
ஆசைக்  கிளி நீ   அருகில்  இருக்க  வரும்   ஆனந்தம் கோடியே

தருகின்ற   மனமும்   தர்ம  குணமும்   தங்கமென  மின்னுமே  --என்
தாயைப்  போல  உன்னை  யெண்ணி தலையில்  வைத்துப்  போற்றுவேன்
உண்மையான  திறமை யினால்  உச்சத்தை  எட்டலாம்   --எந்தன்
உயிரோடு  கலந்து  விட்டால்  நமக்கு  உன்னதங்கள்  கிட்டலாம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக