கண்ணான கவிதையே காற்றிலாடும் குமுதமே --இங்கு
உன்னில் நானும் என்னில் நீயும் தான் உலகமே
உண்மையான அன்பிலே உயர்வுகள் அடையலாம் --நாம்
இருவர் கூட ஒருவராகி புதிய இன்பலோகம் போகலாம்
நானும் வெள்ளை நீயும் வெள்ளை நமது இன்பம் கொள்ளையே --தினம்
தேனும் பாலும் சேரச் சேர நம்முள் தேனாறு பாயுமே
தேடித் தேடி யன்பில் கூடும் திரு விளையாடல் கொஞ்சமா --என்
தேவி உந்தன் வாசல் தேடி தெண்டம் போடும் பக்தன் நான்
வாழ்வு யாவும் இருவர் சேர்ந்து வசந்தம் போல வாழுவோம் --உன்னை
வாரி யணைத்து மடியில் வைத்து எனது வல்லமையைக் காட்டுவேன்
வர்ண ஜாலம் காட்டி உன்னை அஜந்தா ஓவியமாய்த் தீட்டுவேன் --இனி
வந்து விட்டால் எந்த நாளும் நாமும் வசந்த கீதம் பாடலாம்
பெண்ணால் வந்த பெருமையே பேச்சு மிகவும் அருமையே -இங்கு
என்னில் பாதி என்பதாலே எனக்கு உன்மேல் பிரியமே
அன்பு காட்டி வாழ்வதாலே அதிக காலம் வாழலாம் --எனது
ஆசைக் கிளி நீ அருகில் இருக்க வரும் ஆனந்தம் கோடியே
தருகின்ற மனமும் தர்ம குணமும் தங்கமென மின்னுமே --என்
தாயைப் போல உன்னை யெண்ணி தலையில் வைத்துப் போற்றுவேன்
உண்மையான திறமை யினால் உச்சத்தை எட்டலாம் --எந்தன்
உயிரோடு கலந்து விட்டால் நமக்கு உன்னதங்கள் கிட்டலாம்
உன்னில் நானும் என்னில் நீயும் தான் உலகமே
உண்மையான அன்பிலே உயர்வுகள் அடையலாம் --நாம்
இருவர் கூட ஒருவராகி புதிய இன்பலோகம் போகலாம்
நானும் வெள்ளை நீயும் வெள்ளை நமது இன்பம் கொள்ளையே --தினம்
தேனும் பாலும் சேரச் சேர நம்முள் தேனாறு பாயுமே
தேடித் தேடி யன்பில் கூடும் திரு விளையாடல் கொஞ்சமா --என்
தேவி உந்தன் வாசல் தேடி தெண்டம் போடும் பக்தன் நான்
வாழ்வு யாவும் இருவர் சேர்ந்து வசந்தம் போல வாழுவோம் --உன்னை
வாரி யணைத்து மடியில் வைத்து எனது வல்லமையைக் காட்டுவேன்
வர்ண ஜாலம் காட்டி உன்னை அஜந்தா ஓவியமாய்த் தீட்டுவேன் --இனி
வந்து விட்டால் எந்த நாளும் நாமும் வசந்த கீதம் பாடலாம்
பெண்ணால் வந்த பெருமையே பேச்சு மிகவும் அருமையே -இங்கு
என்னில் பாதி என்பதாலே எனக்கு உன்மேல் பிரியமே
அன்பு காட்டி வாழ்வதாலே அதிக காலம் வாழலாம் --எனது
ஆசைக் கிளி நீ அருகில் இருக்க வரும் ஆனந்தம் கோடியே
தருகின்ற மனமும் தர்ம குணமும் தங்கமென மின்னுமே --என்
தாயைப் போல உன்னை யெண்ணி தலையில் வைத்துப் போற்றுவேன்
உண்மையான திறமை யினால் உச்சத்தை எட்டலாம் --எந்தன்
உயிரோடு கலந்து விட்டால் நமக்கு உன்னதங்கள் கிட்டலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக