இறைவா என்னிடம் வருவாயா --எனக்கு
இக பர சுகமும் தருவாயா
குறைகள் நிறைந்த மனிதனப்பா --நீயோ
குவலயம் காக்கும் புனிதனப்பா
உலகம் என்பது உன்னாலே --அது
உருண்டு சுழலும் தன்னாலே
கவலை மறந்தால் நிம்மதி --மக்கள்
களிப்பில் மிதப்பதுன் சன்னதி
நாளும் கோளும் உனக்கேது --இங்கு
நாயகன் நீயிருக்கப் பயமேது
சூழும் வினைகளை வேரறுப்பாய் --எங்கும்
சோகம் தீர்த்திடக் கைகொடுப்பாய்
தருக்கர் பலரைக் கொன்றவனே ---நம்
தமிழிற் கென்றைக்கும் தலைமை யானவனே
விரும்பியே அழைத்திடில் வருபவனே --என்றும்
விண்ணவர் போற்றிடும் தூயவனே
என்னுள் இருந்து இயக்குகிறாய் --தமிழில்
எண்ணற்ற கவிதைகள் வழங்குகிறாய்
பொன்னார் மேனியும் உனதல்லவா --உனை
புகழ்ந்து பாடிட எனக்கும் வரமருள்வாய்
இக பர சுகமும் தருவாயா
குறைகள் நிறைந்த மனிதனப்பா --நீயோ
குவலயம் காக்கும் புனிதனப்பா
உலகம் என்பது உன்னாலே --அது
உருண்டு சுழலும் தன்னாலே
கவலை மறந்தால் நிம்மதி --மக்கள்
களிப்பில் மிதப்பதுன் சன்னதி
நாளும் கோளும் உனக்கேது --இங்கு
நாயகன் நீயிருக்கப் பயமேது
சூழும் வினைகளை வேரறுப்பாய் --எங்கும்
சோகம் தீர்த்திடக் கைகொடுப்பாய்
தருக்கர் பலரைக் கொன்றவனே ---நம்
தமிழிற் கென்றைக்கும் தலைமை யானவனே
விரும்பியே அழைத்திடில் வருபவனே --என்றும்
விண்ணவர் போற்றிடும் தூயவனே
என்னுள் இருந்து இயக்குகிறாய் --தமிழில்
எண்ணற்ற கவிதைகள் வழங்குகிறாய்
பொன்னார் மேனியும் உனதல்லவா --உனை
புகழ்ந்து பாடிட எனக்கும் வரமருள்வாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக