வியாழன், 2 ஆகஸ்ட், 2018

இறைவா 540

இறைவா     என்னிடம்   வருவாயா  --எனக்கு
இக பர           சுகமும்  தருவாயா
குறைகள்      நிறைந்த  மனிதனப்பா  --நீயோ
குவலயம்      காக்கும்    புனிதனப்பா

உலகம்         என்பது    உன்னாலே  --அது
உருண்டு     சுழலும்   தன்னாலே
கவலை        மறந்தால்  நிம்மதி  --மக்கள்
களிப்பில்  மிதப்பதுன்  சன்னதி

நாளும்    கோளும்   உனக்கேது  --இங்கு
நாயகன்   நீயிருக்கப்  பயமேது
சூழும்   வினைகளை  வேரறுப்பாய்  --எங்கும்
சோகம்   தீர்த்திடக்   கைகொடுப்பாய்

தருக்கர்   பலரைக்  கொன்றவனே  ---நம்
தமிழிற்  கென்றைக்கும்  தலைமை  யானவனே
விரும்பியே  அழைத்திடில்  வருபவனே  --என்றும்
விண்ணவர்   போற்றிடும்  தூயவனே

என்னுள்   இருந்து   இயக்குகிறாய்  --தமிழில்
எண்ணற்ற  கவிதைகள்  வழங்குகிறாய்
பொன்னார்  மேனியும்   உனதல்லவா  --உனை
புகழ்ந்து   பாடிட  எனக்கும்  வரமருள்வாய்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக