வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

காதலன் 587

 மடி மீது     தலை     வைப்பேன்   ---என்
 மனசார     முகம்   பார்ப்பேன்
 பிடிவாதம்   உனக்கேனோ   பெண்ணே  --நான்
 புரியாத    புதுமையோ     கண்ணே

 மழை     நாளில்     குடையாவேன்  --உன்
 மனதிற்கு     புது    விடையாவேன்
 கலை  பொங்கும்   நிலவானாய்   முன்னே  --=அன்பு
 காதலன்    நான்     உந்தன்    பின்னே

 இரவுக்குள்   உறவாகி   என்னை யாண்டாய்  --என்
 இதயத்தில்   ஒளியாகி    மீண்டாய்
 பறவைக்குச்   சிறகாகி   பருவத்தில்  உறவாகி   ---நாம்
 கரைகாணா   கடலையும்    கடப்போம்

 கண்ணோடு        கண்    பேசி  --நான்
 காதலில்    உந்தன்   விசுவாசி
 எண்ணத்தில்   உள்ளவள்    நீயே  --இங்கு
 எந்நாளும்   உனக்கென்றும்   சேயே

எப்போதும்   உனது   இணையாவேன்  --உனது
 இளமைக்கு   நல்ல   துணையாவேன்
 தப்பேதும்   நிகழாது   பெண்ணே  ---நீ
 தாரமாவது   நான்   செய்த   தவமே
                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக