மடி மீது தலை வைப்பேன் ---என்
மனசார முகம் பார்ப்பேன்
பிடிவாதம் உனக்கேனோ பெண்ணே --நான்
புரியாத புதுமையோ கண்ணே
மழை நாளில் குடையாவேன் --உன்
மனதிற்கு புது விடையாவேன்
கலை பொங்கும் நிலவானாய் முன்னே --=அன்பு
காதலன் நான் உந்தன் பின்னே
இரவுக்குள் உறவாகி என்னை யாண்டாய் --என்
இதயத்தில் ஒளியாகி மீண்டாய்
பறவைக்குச் சிறகாகி பருவத்தில் உறவாகி ---நாம்
கரைகாணா கடலையும் கடப்போம்
கண்ணோடு கண் பேசி --நான்
காதலில் உந்தன் விசுவாசி
எண்ணத்தில் உள்ளவள் நீயே --இங்கு
எந்நாளும் உனக்கென்றும் சேயே
எப்போதும் உனது இணையாவேன் --உனது
இளமைக்கு நல்ல துணையாவேன்
தப்பேதும் நிகழாது பெண்ணே ---நீ
தாரமாவது நான் செய்த தவமே
மனசார முகம் பார்ப்பேன்
பிடிவாதம் உனக்கேனோ பெண்ணே --நான்
புரியாத புதுமையோ கண்ணே
மழை நாளில் குடையாவேன் --உன்
மனதிற்கு புது விடையாவேன்
கலை பொங்கும் நிலவானாய் முன்னே --=அன்பு
காதலன் நான் உந்தன் பின்னே
இரவுக்குள் உறவாகி என்னை யாண்டாய் --என்
இதயத்தில் ஒளியாகி மீண்டாய்
பறவைக்குச் சிறகாகி பருவத்தில் உறவாகி ---நாம்
கரைகாணா கடலையும் கடப்போம்
கண்ணோடு கண் பேசி --நான்
காதலில் உந்தன் விசுவாசி
எண்ணத்தில் உள்ளவள் நீயே --இங்கு
எந்நாளும் உனக்கென்றும் சேயே
எப்போதும் உனது இணையாவேன் --உனது
இளமைக்கு நல்ல துணையாவேன்
தப்பேதும் நிகழாது பெண்ணே ---நீ
தாரமாவது நான் செய்த தவமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக