வட்ட நிலவு கொட்டி அளப்பதென்ன --வீசும்
வாடைக் காற்று புது மேடை போட்டதென்ன
தொட்டு சுவைக்க நிலைமை தொல்லை யான்தடி --உன்
தோளில் சாய்ந்திட மனமோ தூது போனதடி
வெட்ட வெளியினிலே விடியும்வரை இருந்தோம் --என்
கட்டழகு மயிலே காமன் கணைகள் பாயுதடி
வெட்டிய கரும்பின் சுவை விசமாய்ப் போச்சுதடி --மன
வேதனையில் நானும் இங்கே வெம்பித் தவிக்கிறேனே
இட்ட அடியினிலே உந்தன் இடையும் அசையுமடி --உன்னை
இளமை விருந்தாக்க நான் எண்ணத்தில் ஆசை வைத்தேன்
பட்ட துயர மெல்லாம் எந்தன் பாவையே போதாதோ --எனது
பருவ காலப் பசியை நீயும் பரிவுடன் தீராயோ
தாவணி உடையினிலே என் தங்கம் வருகையிலே --என்
ஆவி சிலிர்க்குதடி உன்னையும் ஆண்டிட நினைக்குதடி
மோகம் பெருக்கெடுக்கும் மனமோஹினி நீயல்லவா --வானில்
முழு மதியும் நீயே எனக்கும் நல்ல முக்தி அருள்வாயோ
சிரித்து சிரித்து எனோ எந்தன் சீவனைக் கொல்லுகிறாய் --இங்கு
சீதள நிலவாகி எனது சிந்தையை ஆளுகிறாய்
எரிக்கும் சுடராக என்னை ஏனடி மாற்றுகிறாய் --இதனை
உணராமல் தினமும் ஏனடி என்னைத் தூற்றுகிறாய்
வாடைக் காற்று புது மேடை போட்டதென்ன
தொட்டு சுவைக்க நிலைமை தொல்லை யான்தடி --உன்
தோளில் சாய்ந்திட மனமோ தூது போனதடி
வெட்ட வெளியினிலே விடியும்வரை இருந்தோம் --என்
கட்டழகு மயிலே காமன் கணைகள் பாயுதடி
வெட்டிய கரும்பின் சுவை விசமாய்ப் போச்சுதடி --மன
வேதனையில் நானும் இங்கே வெம்பித் தவிக்கிறேனே
இட்ட அடியினிலே உந்தன் இடையும் அசையுமடி --உன்னை
இளமை விருந்தாக்க நான் எண்ணத்தில் ஆசை வைத்தேன்
பட்ட துயர மெல்லாம் எந்தன் பாவையே போதாதோ --எனது
பருவ காலப் பசியை நீயும் பரிவுடன் தீராயோ
தாவணி உடையினிலே என் தங்கம் வருகையிலே --என்
ஆவி சிலிர்க்குதடி உன்னையும் ஆண்டிட நினைக்குதடி
மோகம் பெருக்கெடுக்கும் மனமோஹினி நீயல்லவா --வானில்
முழு மதியும் நீயே எனக்கும் நல்ல முக்தி அருள்வாயோ
சிரித்து சிரித்து எனோ எந்தன் சீவனைக் கொல்லுகிறாய் --இங்கு
சீதள நிலவாகி எனது சிந்தையை ஆளுகிறாய்
எரிக்கும் சுடராக என்னை ஏனடி மாற்றுகிறாய் --இதனை
உணராமல் தினமும் ஏனடி என்னைத் தூற்றுகிறாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக