அறியாப் பிள்ளை தெரியாது --அவளை
அழகி என்றிடில் தவறேது
வருவாள் அந்திக் கடையோரம் --பலர்
வாயினில் உமிழ் நீர் வழிந்தோடும்
செதுக்கி வைத்திட்ட செங்கமலம் --அவள்
தேனுமினிய வெள்ளை மனம்
ஒதுக்கி வைத்திட்ட ஊ ரினிலே --தினம்
உழைத்துப் பிழைத்தாள் வாழ்வினிலே
கள்ளம் கபடம் அறியாதவள் --அவளோ
காதல் என்ற சொல் தெரியாதவள்
பள்ளம் மேடுகள் அறியாமலே --இங்கு
பம்பரம் போலவே சுற்றுபவள்
கட்டிய கதைகளைச் சொல்வார்கள் --அவளது
கற்பிற்கு களங்கமும் செய்வார்கள்
அற்புத அழகி அவளென்பேன் --இனி
அவளே எனக்குத் துணையென்பேன்
கண்டால் என்னிடம் சொல்லுங்கள் --இதனை
கற்பனை என்றால் தள்ளுங்கள்
பெண்ணாய் அவளை எண்ணாமல் --சிறு
பிள்ளை என்றே நான் எண்ணுகிறேன்
அழகி என்றிடில் தவறேது
வருவாள் அந்திக் கடையோரம் --பலர்
வாயினில் உமிழ் நீர் வழிந்தோடும்
செதுக்கி வைத்திட்ட செங்கமலம் --அவள்
தேனுமினிய வெள்ளை மனம்
ஒதுக்கி வைத்திட்ட ஊ ரினிலே --தினம்
உழைத்துப் பிழைத்தாள் வாழ்வினிலே
கள்ளம் கபடம் அறியாதவள் --அவளோ
காதல் என்ற சொல் தெரியாதவள்
பள்ளம் மேடுகள் அறியாமலே --இங்கு
பம்பரம் போலவே சுற்றுபவள்
கட்டிய கதைகளைச் சொல்வார்கள் --அவளது
கற்பிற்கு களங்கமும் செய்வார்கள்
அற்புத அழகி அவளென்பேன் --இனி
அவளே எனக்குத் துணையென்பேன்
கண்டால் என்னிடம் சொல்லுங்கள் --இதனை
கற்பனை என்றால் தள்ளுங்கள்
பெண்ணாய் அவளை எண்ணாமல் --சிறு
பிள்ளை என்றே நான் எண்ணுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக