சனி, 4 ஆகஸ்ட், 2018

பெண்மை 545

 கண்களில்  நிறைந்தவன்  எந்தன்  கைவளைத்  தொட்டான்  --என்னை
 கட்டிலில்    தள்ளியே   அன்று  பக்கத்தில்  படுத்தான்
 நினைவினை  இழந்தேன்  நிம்மதி  குலைந்தேன்  ---என்
 நெற்றியில்  முத்தங்கள்   மொத்தமாய்க்  கொடுத்தான்

 கண்கள்  மயங்கிடக்  காற்றினில்   பறந்தேன்  --அவனோ
 கட்டியே  யணைத்து  மிச்சத்தைக்  கொடுத்தான்
 பெண்மையின்   பயனை   பின்னரே  அறிந்தேன்  --கன்னி
 என்னையும்  அவனுக்கு  இன்பக்  காதலி  யாக்கினான்

 சொல்லிட  முடியாத   சுகமும்  சேர்ந்தது  --=அவன் 
 கள்ளச்   சிரிப்பினில்   கருத்தினை  இழந்தேன்
 பள்ளிப்  பாடங்களைப்   பக்குவமாய்ச்  சொன்னான்  --நானும்
 படித்தேன்  ரசித்தேன்    பனியாய்க்  கரைந்தேன்

 துள்ளியே  யணைத்தவன்  எனோ  தூரமாய்ப்  போனான்  --நானோ
 தணலினில்   விழுந்த  இளம்  தளிர்   போல்  ஆனேன்
 சொல்லிய  வார்த்தைகள்  அந்த  சுந்தரன்  மறந்தான்  --எனக்கு
 சுகமென  வந்தவன்  தினம்  எனது  தூக்கத்தைக்  கெடுத்தான்

 நம்பியே  யிருந்தது  இங்கே  நல்லது   இல்லையோ  ----மண்ணில்
 நன்றி  என்பதும்   நம்மிடை  எனோ  இன்னமும்  மறதியோ
 வெம்பி  அழுகிறேன்  அன்பரே   விரைவினில்  வருவாய் --எந்தன்
 வேதனை   போக்கி உந்தன்  சாதனை  புரிவாய்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக