கண்களில் நிறைந்தவன் எந்தன் கைவளைத் தொட்டான் --என்னை
கட்டிலில் தள்ளியே அன்று பக்கத்தில் படுத்தான்
நினைவினை இழந்தேன் நிம்மதி குலைந்தேன் ---என்
நெற்றியில் முத்தங்கள் மொத்தமாய்க் கொடுத்தான்
கண்கள் மயங்கிடக் காற்றினில் பறந்தேன் --அவனோ
கட்டியே யணைத்து மிச்சத்தைக் கொடுத்தான்
பெண்மையின் பயனை பின்னரே அறிந்தேன் --கன்னி
என்னையும் அவனுக்கு இன்பக் காதலி யாக்கினான்
சொல்லிட முடியாத சுகமும் சேர்ந்தது --=அவன்
கள்ளச் சிரிப்பினில் கருத்தினை இழந்தேன்
பள்ளிப் பாடங்களைப் பக்குவமாய்ச் சொன்னான் --நானும்
படித்தேன் ரசித்தேன் பனியாய்க் கரைந்தேன்
துள்ளியே யணைத்தவன் எனோ தூரமாய்ப் போனான் --நானோ
தணலினில் விழுந்த இளம் தளிர் போல் ஆனேன்
சொல்லிய வார்த்தைகள் அந்த சுந்தரன் மறந்தான் --எனக்கு
சுகமென வந்தவன் தினம் எனது தூக்கத்தைக் கெடுத்தான்
நம்பியே யிருந்தது இங்கே நல்லது இல்லையோ ----மண்ணில்
நன்றி என்பதும் நம்மிடை எனோ இன்னமும் மறதியோ
வெம்பி அழுகிறேன் அன்பரே விரைவினில் வருவாய் --எந்தன்
வேதனை போக்கி உந்தன் சாதனை புரிவாய்
கட்டிலில் தள்ளியே அன்று பக்கத்தில் படுத்தான்
நினைவினை இழந்தேன் நிம்மதி குலைந்தேன் ---என்
நெற்றியில் முத்தங்கள் மொத்தமாய்க் கொடுத்தான்
கண்கள் மயங்கிடக் காற்றினில் பறந்தேன் --அவனோ
கட்டியே யணைத்து மிச்சத்தைக் கொடுத்தான்
பெண்மையின் பயனை பின்னரே அறிந்தேன் --கன்னி
என்னையும் அவனுக்கு இன்பக் காதலி யாக்கினான்
சொல்லிட முடியாத சுகமும் சேர்ந்தது --=அவன்
கள்ளச் சிரிப்பினில் கருத்தினை இழந்தேன்
பள்ளிப் பாடங்களைப் பக்குவமாய்ச் சொன்னான் --நானும்
படித்தேன் ரசித்தேன் பனியாய்க் கரைந்தேன்
துள்ளியே யணைத்தவன் எனோ தூரமாய்ப் போனான் --நானோ
தணலினில் விழுந்த இளம் தளிர் போல் ஆனேன்
சொல்லிய வார்த்தைகள் அந்த சுந்தரன் மறந்தான் --எனக்கு
சுகமென வந்தவன் தினம் எனது தூக்கத்தைக் கெடுத்தான்
நம்பியே யிருந்தது இங்கே நல்லது இல்லையோ ----மண்ணில்
நன்றி என்பதும் நம்மிடை எனோ இன்னமும் மறதியோ
வெம்பி அழுகிறேன் அன்பரே விரைவினில் வருவாய் --எந்தன்
வேதனை போக்கி உந்தன் சாதனை புரிவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக