வியாழன், 30 ஆகஸ்ட், 2018

வாழ்க 597

 கண்ணான    கண்ணே   --என்
 கண்ணீரின்   முன்னே
 பொன்னாக   வளர்ப்பேன்   --நீ
 புகழாக    வருவாய்

மின்னாமல்   முழங்கும்  --கரு
 மேகங்கள்   போல
 இன்னலத்   தாங்கும்  --நல்ல
 இடிதாங்கி   ஆனேன்

பாலோடு   சோறும்  --இங்கே
 உனக்கில்லை   கண்ணே
பசியாறக்   கஞ்சி யை  --நானும்
 பாசமாய்த்    தருவேன்

கற்றிட    வேண்டும்  --அதை
கவனமாய்   செய்வாய்
பெற்றாள்   நல்லதை  --இதை
பலபேர்   சொல்ல வேண்டும்

வேலையைத்   தேடு   --நீயும்
விரைவாகப்   படித்து
வேதனை   தீரும்   --எனது
விழிநீர்    நிற்கும்

'அன்பான   துணையை  --உன்
அறிவாலே    தேடு
பண்பான    குழந்தை  --அதன்
பலனாகக்   கிடைக்கும்

தாயின்   கனவினை   -நீயே
தளராமல்   முடிப்பாய்
நோயின்றி   உலகிலே  --இங்கு
நூற்றாண்டு    வாழ்க  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக