கண்ணான கண்ணே --என்
கண்ணீரின் முன்னே
பொன்னாக வளர்ப்பேன் --நீ
புகழாக வருவாய்
மின்னாமல் முழங்கும் --கரு
மேகங்கள் போல
இன்னலத் தாங்கும் --நல்ல
இடிதாங்கி ஆனேன்
பாலோடு சோறும் --இங்கே
உனக்கில்லை கண்ணே
பசியாறக் கஞ்சி யை --நானும்
பாசமாய்த் தருவேன்
கற்றிட வேண்டும் --அதை
கவனமாய் செய்வாய்
பெற்றாள் நல்லதை --இதை
பலபேர் சொல்ல வேண்டும்
வேலையைத் தேடு --நீயும்
விரைவாகப் படித்து
வேதனை தீரும் --எனது
விழிநீர் நிற்கும்
'அன்பான துணையை --உன்
அறிவாலே தேடு
பண்பான குழந்தை --அதன்
பலனாகக் கிடைக்கும்
தாயின் கனவினை -நீயே
தளராமல் முடிப்பாய்
நோயின்றி உலகிலே --இங்கு
நூற்றாண்டு வாழ்க
கண்ணீரின் முன்னே
பொன்னாக வளர்ப்பேன் --நீ
புகழாக வருவாய்
மின்னாமல் முழங்கும் --கரு
மேகங்கள் போல
இன்னலத் தாங்கும் --நல்ல
இடிதாங்கி ஆனேன்
பாலோடு சோறும் --இங்கே
உனக்கில்லை கண்ணே
பசியாறக் கஞ்சி யை --நானும்
பாசமாய்த் தருவேன்
கற்றிட வேண்டும் --அதை
கவனமாய் செய்வாய்
பெற்றாள் நல்லதை --இதை
பலபேர் சொல்ல வேண்டும்
வேலையைத் தேடு --நீயும்
விரைவாகப் படித்து
வேதனை தீரும் --எனது
விழிநீர் நிற்கும்
'அன்பான துணையை --உன்
அறிவாலே தேடு
பண்பான குழந்தை --அதன்
பலனாகக் கிடைக்கும்
தாயின் கனவினை -நீயே
தளராமல் முடிப்பாய்
நோயின்றி உலகிலே --இங்கு
நூற்றாண்டு வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக