பல்லவி
வருவாய் வருவாய் வடிவேல் முருகா ---என்
வாழ்வில் உனையே வணங்கிச் சுகம் பெற (வருவாய் )
அனுபல்லவி
உரமது பெருகி திறமைகள் வளர்ந்திட --நான்
திருப்புகழ் பாடி உந்தன் திருவடி தேடிட (வருவாய் )
சரணங்கள்
தணிகை மலைதனில் தண்ணருள் புரிவாய் ---நம்
தமிழெனும் மொழியின் தத்துவம் ஆனாய்
முனிவரும் தேவரும் முடியுடை வேந்தரும் ---உனது
முழுமதி முகமெழிலில் நல்ல மோட்சமே அடைவார் (வருவாய் )
அழகெனும் தோள் அம்பெனும் விழிகள் --நம்
அண்ணலுக்கு இணையாய் வேறு அழகனும் உண்டோ
பழமுதிர் சோலையில் அன்று பாங்குடன் அமைந்தாய் ---உன்
பக்தருக்கு அருளிடும் கருணை வித்தகன் நீயே (வருவாய் )
செந்தூர் பதிவாழ் செந்தில் வேலனே --கடலில்
சீறிடும் அலைகள் உந்தன் சிறப்பினைப் பாடும்
வந்தவர் குறைகளை மாற்றிடும் வேலவா --உன்னை
வணங்கினார் பெறுவது வாழ்வினில் நிறையவே (வருவாய் )
திருநாள் என்பது உந்தன் திருவடி நிழலே ---உன்
சேவடி தொழுவது தினமும் எந்தன் கடனே
வரும்நாள் என்றென வாசலில் நிற்பேன் ---நீயும்
வந்திடு முருகா இந்த வையகம் செழித்திட (வருவாய் )
வருவாய் வருவாய் வடிவேல் முருகா ---என்
வாழ்வில் உனையே வணங்கிச் சுகம் பெற (வருவாய் )
அனுபல்லவி
உரமது பெருகி திறமைகள் வளர்ந்திட --நான்
திருப்புகழ் பாடி உந்தன் திருவடி தேடிட (வருவாய் )
சரணங்கள்
தணிகை மலைதனில் தண்ணருள் புரிவாய் ---நம்
தமிழெனும் மொழியின் தத்துவம் ஆனாய்
முனிவரும் தேவரும் முடியுடை வேந்தரும் ---உனது
முழுமதி முகமெழிலில் நல்ல மோட்சமே அடைவார் (வருவாய் )
அழகெனும் தோள் அம்பெனும் விழிகள் --நம்
அண்ணலுக்கு இணையாய் வேறு அழகனும் உண்டோ
பழமுதிர் சோலையில் அன்று பாங்குடன் அமைந்தாய் ---உன்
பக்தருக்கு அருளிடும் கருணை வித்தகன் நீயே (வருவாய் )
செந்தூர் பதிவாழ் செந்தில் வேலனே --கடலில்
சீறிடும் அலைகள் உந்தன் சிறப்பினைப் பாடும்
வந்தவர் குறைகளை மாற்றிடும் வேலவா --உன்னை
வணங்கினார் பெறுவது வாழ்வினில் நிறையவே (வருவாய் )
திருநாள் என்பது உந்தன் திருவடி நிழலே ---உன்
சேவடி தொழுவது தினமும் எந்தன் கடனே
வரும்நாள் என்றென வாசலில் நிற்பேன் ---நீயும்
வந்திடு முருகா இந்த வையகம் செழித்திட (வருவாய் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக