புதன், 29 ஆகஸ்ட், 2018

பழமுதிர் சோலை 594

                                         பல்லவி
வருவாய்        வருவாய்       வடிவேல்   முருகா     ---என்
வாழ்வில்   உனையே      வணங்கிச்    சுகம் பெற        (வருவாய் )
                                         அனுபல்லவி
உரமது        பெருகி       திறமைகள்      வளர்ந்திட    --நான்
திருப்புகழ்       பாடி     உந்தன்     திருவடி     தேடிட   (வருவாய் )
                                         சரணங்கள்
தணிகை      மலைதனில்     தண்ணருள்    புரிவாய்  ---நம்
தமிழெனும்    மொழியின்   தத்துவம்     ஆனாய்
முனிவரும்   தேவரும்       முடியுடை    வேந்தரும் ---உனது
முழுமதி      முகமெழிலில்     நல்ல      மோட்சமே   அடைவார்   (வருவாய்  )

அழகெனும்    தோள்      அம்பெனும்       விழிகள்  --நம்
அண்ணலுக்கு     இணையாய்   வேறு    அழகனும்   உண்டோ
பழமுதிர்  சோலையில்   அன்று    பாங்குடன்    அமைந்தாய்  ---உன்
பக்தருக்கு    அருளிடும்    கருணை    வித்தகன்     நீயே    (வருவாய் )

செந்தூர்      பதிவாழ்       செந்தில்   வேலனே   --கடலில்
சீறிடும்     அலைகள்   உந்தன்    சிறப்பினைப்    பாடும்
வந்தவர்     குறைகளை    மாற்றிடும்    வேலவா   --உன்னை
வணங்கினார்    பெறுவது    வாழ்வினில்     நிறையவே     (வருவாய் )

திருநாள்     என்பது    உந்தன்     திருவடி    நிழலே   ---உன்
சேவடி     தொழுவது     தினமும்    எந்தன்    கடனே
வரும்நாள்      என்றென       வாசலில்    நிற்பேன் ---நீயும்
வந்திடு    முருகா    இந்த     வையகம்   செழித்திட    (வருவாய் )

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக