அவன் ;; இளமைக் காலம் நிலைக்குமா --மனம்
எதை எதையோ நினைக்குமா
பழகிய கலைகள் மறக்குமா --நீ
பார்த்துப் பதிலும் சொல்லம்மா
அவள் ;; கால காலங்கள் மாறலாம் ---கொண்ட
கடமை எந்நாளும் மாறுமா
நல்லவை என்றும் ஜெயிக்குமே --=எதுவும்
நாயகன் விதிப்படி நடக்குமே
அவன் ;;கண்மணி உன் மனம் வெள்ளையே ---இங்கு
கருணை என்பது இல்லையே
பெண்ணாய் நீயும் உணர்ந்திடு ---இதை
பிறரிடம் எடுத்துச் சொல்லிடு
அவள் ;;நியாயம் எங்கிலும் மாறுமா ---உன்னால்
நிஜமும் பொய்யாய்ப் போகுமா
பாயும் புலியும் பசுவாகுமா ---நீயும்
படித்துத் தெரிந்து கொள்ளுய்யா
அவன் ;;ஏட்டிக்கு போட்டியாய்ப் பேசுறே ---நீயும்
எதிர்த்து என்னமா குதிக்கிறே
போட்டால் தெரியும் போடு ---இப்பவே
பொறந்த வீட்டுக்கு ஓடு
அவள் ;;நடப்பதை சொன்னால் கோபமா --இங்கே
நடக்கும் நடப்பு புரியுமா
உள்ளதை வைத்து வாழய்யா --இனிமேல்
உருப்படற வழியினைப் பாருய்யா
அவன் சொன்னபடி கேட்டு நா நடக்கிறேன் --உன்னை
சுகமா வைச்சுக்கப் பாக்கிறேன்
கண்மணி கோபமினி ஏனடி ---என்
காதலி என்றைக்கும் நீயடி
அவள் ;;வெட்டிப் பேச்சும் வேணாமே ---உன்
விசயம் எனக்கும் புரியுமே
விட்டதைப் புடிக்கக் கத்துக்கோ --நீ
விவரமா இனிமேல் வாழ்ந்துக்கோ ;
எதை எதையோ நினைக்குமா
பழகிய கலைகள் மறக்குமா --நீ
பார்த்துப் பதிலும் சொல்லம்மா
அவள் ;; கால காலங்கள் மாறலாம் ---கொண்ட
கடமை எந்நாளும் மாறுமா
நல்லவை என்றும் ஜெயிக்குமே --=எதுவும்
நாயகன் விதிப்படி நடக்குமே
அவன் ;;கண்மணி உன் மனம் வெள்ளையே ---இங்கு
கருணை என்பது இல்லையே
பெண்ணாய் நீயும் உணர்ந்திடு ---இதை
பிறரிடம் எடுத்துச் சொல்லிடு
அவள் ;;நியாயம் எங்கிலும் மாறுமா ---உன்னால்
நிஜமும் பொய்யாய்ப் போகுமா
பாயும் புலியும் பசுவாகுமா ---நீயும்
படித்துத் தெரிந்து கொள்ளுய்யா
அவன் ;;ஏட்டிக்கு போட்டியாய்ப் பேசுறே ---நீயும்
எதிர்த்து என்னமா குதிக்கிறே
போட்டால் தெரியும் போடு ---இப்பவே
பொறந்த வீட்டுக்கு ஓடு
அவள் ;;நடப்பதை சொன்னால் கோபமா --இங்கே
நடக்கும் நடப்பு புரியுமா
உள்ளதை வைத்து வாழய்யா --இனிமேல்
உருப்படற வழியினைப் பாருய்யா
அவன் சொன்னபடி கேட்டு நா நடக்கிறேன் --உன்னை
சுகமா வைச்சுக்கப் பாக்கிறேன்
கண்மணி கோபமினி ஏனடி ---என்
காதலி என்றைக்கும் நீயடி
அவள் ;;வெட்டிப் பேச்சும் வேணாமே ---உன்
விசயம் எனக்கும் புரியுமே
விட்டதைப் புடிக்கக் கத்துக்கோ --நீ
விவரமா இனிமேல் வாழ்ந்துக்கோ ;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக