புளியஞ் சோலை அழகு ---நீ
புனிதம் கொண்டு பழகு
மலையைப் போன்ற இடங்களே ---உன்
மனதைக் கவரும் நல்ல தடங்களே
அன்னைத் தெய்வம் நடுவிலே ---அவள்
அழகுத் தோழிகள் அருகிலே
என்னைப் படைத்தாள் இறைவியே --=எனக்கு
ஏற்றம் தந்தாள் வாழ்விலே
மந்திக் கூட்டம் குதிக்குமே --நல்ல
மரத்தில் தாவி மகிழுமே
தொந்தி வைத்த பிள்ளையார் --உடன்
தோகை மயில் வேலவன்
சலசலத்து ஓடிடும் ஆற்றிலே --இனிய
சங்கீதம் பாடும் வெள்ளி மீன்களே
பளபளக்கும் சூரியக் கதிர்களை --அங்கு
பகலில் மறைக்கும் வான் மரங்களே
கால காலங்கள் போயினும் ---எங்கள்
கருணைத் தாயை மறப்பதோ
குல தெய்வமெனும் பெருமையில் --அன்பு
குமரியவள் எம்முள் ஆள்கிறாள்
கன்னித் தாயின் மடியிலே --தமிழ்
கவிதை வைத்து வணங்குவேன்
என்னில் அவளும் இருப்பதால் ---நல்ல
இனிய வாழ்வு வாழ்கிறேன்
புனிதம் கொண்டு பழகு
மலையைப் போன்ற இடங்களே ---உன்
மனதைக் கவரும் நல்ல தடங்களே
அன்னைத் தெய்வம் நடுவிலே ---அவள்
அழகுத் தோழிகள் அருகிலே
என்னைப் படைத்தாள் இறைவியே --=எனக்கு
ஏற்றம் தந்தாள் வாழ்விலே
மந்திக் கூட்டம் குதிக்குமே --நல்ல
மரத்தில் தாவி மகிழுமே
தொந்தி வைத்த பிள்ளையார் --உடன்
தோகை மயில் வேலவன்
சலசலத்து ஓடிடும் ஆற்றிலே --இனிய
சங்கீதம் பாடும் வெள்ளி மீன்களே
பளபளக்கும் சூரியக் கதிர்களை --அங்கு
பகலில் மறைக்கும் வான் மரங்களே
கால காலங்கள் போயினும் ---எங்கள்
கருணைத் தாயை மறப்பதோ
குல தெய்வமெனும் பெருமையில் --அன்பு
குமரியவள் எம்முள் ஆள்கிறாள்
கன்னித் தாயின் மடியிலே --தமிழ்
கவிதை வைத்து வணங்குவேன்
என்னில் அவளும் இருப்பதால் ---நல்ல
இனிய வாழ்வு வாழ்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக