சனி, 18 ஆகஸ்ட், 2018

புளியஞ்சோலை 573

புளியஞ்     சோலை     அழகு   ---நீ
புனிதம்     கொண்டு   பழகு
மலையைப்  போன்ற   இடங்களே   ---உன்
மனதைக்    கவரும்   நல்ல  தடங்களே

அன்னைத்   தெய்வம்    நடுவிலே   ---அவள்
அழகுத்    தோழிகள்    அருகிலே
என்னைப்   படைத்தாள்   இறைவியே  --=எனக்கு
ஏற்றம்    தந்தாள்    வாழ்விலே

மந்திக்   கூட்டம்   குதிக்குமே   --நல்ல
மரத்தில்  தாவி    மகிழுமே
தொந்தி  வைத்த    பிள்ளையார்  --உடன்
தோகை   மயில்   வேலவன்

சலசலத்து   ஓடிடும்   ஆற்றிலே  --இனிய
சங்கீதம்  பாடும்   வெள்ளி  மீன்களே
பளபளக்கும்  சூரியக்    கதிர்களை  --அங்கு
பகலில்    மறைக்கும்   வான் மரங்களே

கால      காலங்கள்    போயினும் ---எங்கள்
கருணைத்    தாயை    மறப்பதோ
குல     தெய்வமெனும்   பெருமையில்  --அன்பு
குமரியவள்    எம்முள்    ஆள்கிறாள்

கன்னித்   தாயின்    மடியிலே   --தமிழ்
கவிதை   வைத்து    வணங்குவேன்
என்னில்   அவளும்   இருப்பதால்   ---நல்ல
இனிய    வாழ்வு   வாழ்கிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக