தேர் போல வந்தாள் தெருவிலே ---நான்
திகைத்து நின்றேன் நேரிலே
பேரென்ன வென்பது தெரியலே ---அவளை
பிரிந்திட எந்தன் மனம் பொறுக்கல்லே
தாவணி கட்டிய தேவதை ---அவளை
தழுவிட நினைத்தவர் படு வதை
மோகினி என்பவள் இவள் தானோ --=நல்ல
மோட்சமும் இவளால் வந்திடுமா
கல்லில் வடித்த சிலையானேன் --அவளது
கருணைக்கு ஏங்கிடும் நிலையானேன்
புல்லாய் என்னையும் நினைப்பாளோ ---இல்லை
புன்னகை புரிந்தே அணைப்பாளோ
பேசிட என் நாவும் எழவில்லை ---அவள்
பின்னால் செல்லவும் துணிவில்லை
வீசிடும் காற்றே தூது போயேன் ----இன்றே
விரைவில் அழைத்து நீ வருவாயா
கண்ணும் கண்ணும் கலந்ததுண்டு ---அவள்
காதல் என்னுள் மலர்ந்ததுண்டு
பெண்ணாள் அவளையும் அடைவேனோ ---அந்த
பெருமாள் துணையும் இனி வேண்டும்
திகைத்து நின்றேன் நேரிலே
பேரென்ன வென்பது தெரியலே ---அவளை
பிரிந்திட எந்தன் மனம் பொறுக்கல்லே
தாவணி கட்டிய தேவதை ---அவளை
தழுவிட நினைத்தவர் படு வதை
மோகினி என்பவள் இவள் தானோ --=நல்ல
மோட்சமும் இவளால் வந்திடுமா
கல்லில் வடித்த சிலையானேன் --அவளது
கருணைக்கு ஏங்கிடும் நிலையானேன்
புல்லாய் என்னையும் நினைப்பாளோ ---இல்லை
புன்னகை புரிந்தே அணைப்பாளோ
பேசிட என் நாவும் எழவில்லை ---அவள்
பின்னால் செல்லவும் துணிவில்லை
வீசிடும் காற்றே தூது போயேன் ----இன்றே
விரைவில் அழைத்து நீ வருவாயா
கண்ணும் கண்ணும் கலந்ததுண்டு ---அவள்
காதல் என்னுள் மலர்ந்ததுண்டு
பெண்ணாள் அவளையும் அடைவேனோ ---அந்த
பெருமாள் துணையும் இனி வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக