வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பெருமாள் 584

 தேர்  போல      வந்தாள்   தெருவிலே   ---நான்
திகைத்து    நின்றேன்   நேரிலே
 பேரென்ன  வென்பது  தெரியலே  ---அவளை
பிரிந்திட     எந்தன்   மனம்  பொறுக்கல்லே

தாவணி    கட்டிய   தேவதை   ---அவளை
தழுவிட   நினைத்தவர்   படு   வதை
மோகினி   என்பவள்   இவள் தானோ  --=நல்ல
மோட்சமும்   இவளால்   வந்திடுமா

கல்லில்   வடித்த   சிலையானேன்  --அவளது
கருணைக்கு  ஏங்கிடும்   நிலையானேன்
புல்லாய்   என்னையும்   நினைப்பாளோ  ---இல்லை
புன்னகை    புரிந்தே    அணைப்பாளோ

பேசிட   என் நாவும்   எழவில்லை    ---அவள்
பின்னால்   செல்லவும்    துணிவில்லை
வீசிடும்   காற்றே   தூது   போயேன்   ----இன்றே
விரைவில்   அழைத்து   நீ  வருவாயா

கண்ணும்     கண்ணும்   கலந்ததுண்டு  ---அவள்
காதல்   என்னுள்   மலர்ந்ததுண்டு
பெண்ணாள்    அவளையும்   அடைவேனோ ---அந்த
பெருமாள்   துணையும்    இனி    வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக