ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

தர்மம் 574

 தமிழைப்   பாடிப்     பிழைப்பவன்  --நல்ல
தர்ம     சிந்தனை   உள்ளவன்
கலைகள்   நிறைந்த   மனத்தினன்  --தமிழ்
கவிஞனெனும்   பெயரினைப்   பெற்றவன்

மடியில்    கனமும்    இல்லையே  --அவன்
மனது   என்றும்     வெள்ளையே
அடிமை   என்றால்   தொல்லையே  --இங்கே
அவனும்   நமக்குப்    பிள்ளையே

பெண்ணும்   கண்ணும்   ஒன்றுதான்  --வீண்
பேதம்    மறைவது   என்றுதான்
மண்ணில்   அனைவரும்   ஓர்நிறை  ---இதை
மனதில்   வைக்கணும்    பலமுறை

நாடு   என்பது    நமதல்லவா   ---அதை
நாளும்   காப்பது   பொறுப்பல்லவா
தேடும்   பொருளை    பொதுவிலாக்கு  --உனது
தேம்பும்    மனதைக்    கோவிலாக்கு

பள்ளிகள்   எங்கிலும்    கட்டுவாய்  --நல்ல
பணத்தை    அதிலே    கொட்டுவாய்
இல்லாதவர்க்கு   இடமும்   கொடுத்திடு   --நீயும்
இனிய    பெயரை  எடுத்திடு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக