தமிழைப் பாடிப் பிழைப்பவன் --நல்ல
தர்ம சிந்தனை உள்ளவன்
கலைகள் நிறைந்த மனத்தினன் --தமிழ்
கவிஞனெனும் பெயரினைப் பெற்றவன்
மடியில் கனமும் இல்லையே --அவன்
மனது என்றும் வெள்ளையே
அடிமை என்றால் தொல்லையே --இங்கே
அவனும் நமக்குப் பிள்ளையே
பெண்ணும் கண்ணும் ஒன்றுதான் --வீண்
பேதம் மறைவது என்றுதான்
மண்ணில் அனைவரும் ஓர்நிறை ---இதை
மனதில் வைக்கணும் பலமுறை
நாடு என்பது நமதல்லவா ---அதை
நாளும் காப்பது பொறுப்பல்லவா
தேடும் பொருளை பொதுவிலாக்கு --உனது
தேம்பும் மனதைக் கோவிலாக்கு
பள்ளிகள் எங்கிலும் கட்டுவாய் --நல்ல
பணத்தை அதிலே கொட்டுவாய்
இல்லாதவர்க்கு இடமும் கொடுத்திடு --நீயும்
இனிய பெயரை எடுத்திடு
தர்ம சிந்தனை உள்ளவன்
கலைகள் நிறைந்த மனத்தினன் --தமிழ்
கவிஞனெனும் பெயரினைப் பெற்றவன்
மடியில் கனமும் இல்லையே --அவன்
மனது என்றும் வெள்ளையே
அடிமை என்றால் தொல்லையே --இங்கே
அவனும் நமக்குப் பிள்ளையே
பெண்ணும் கண்ணும் ஒன்றுதான் --வீண்
பேதம் மறைவது என்றுதான்
மண்ணில் அனைவரும் ஓர்நிறை ---இதை
மனதில் வைக்கணும் பலமுறை
நாடு என்பது நமதல்லவா ---அதை
நாளும் காப்பது பொறுப்பல்லவா
தேடும் பொருளை பொதுவிலாக்கு --உனது
தேம்பும் மனதைக் கோவிலாக்கு
பள்ளிகள் எங்கிலும் கட்டுவாய் --நல்ல
பணத்தை அதிலே கொட்டுவாய்
இல்லாதவர்க்கு இடமும் கொடுத்திடு --நீயும்
இனிய பெயரை எடுத்திடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக