திருநாள் வருமோ தெரியாது --அந்த
தேவன் வருகை அறியாது
மணநாள் என்று முடிவாகும் --இனி
மகிழவே வாழ்வினில் விடிவாகும்
வருவேன் என்றார் வந்தாரா ---வாரி
அனைத்து முத்தமும் தந்தாரா
அருகில் இருந்தால் நலமாகும் ---என்னை
அகன்றால் கண்கள் குளமாகும்
இரவில் துடிப்பேன் தனியாக --=அவர்
இருந்தால் உள்ளம் கனியாகும்
உறவால் அடைந்தேன் புதுக் கோலம் ---எங்கள்
உயிரின் ஆழமோ வெகு நீளம்
அவரை எண்ணியே மருகுகின்றேன் --காதல்
அன்பை நினைத்து உருகுகின்றேன்
பயிரை வளர்க்கும் வான் மழையே --நான்
பதறித் துடிப்பது என் பிழையே
என்றோ ஒருநாள் வருவாரே ---என்னை
அணைத்து சுகமும் தருவாரே
ஒன்றாய் இணைந்து வாழ்வோமே ---இந்த
உலகில் நற்பெயர் பெறுவோமே
தேவன் வருகை அறியாது
மணநாள் என்று முடிவாகும் --இனி
மகிழவே வாழ்வினில் விடிவாகும்
வருவேன் என்றார் வந்தாரா ---வாரி
அனைத்து முத்தமும் தந்தாரா
அருகில் இருந்தால் நலமாகும் ---என்னை
அகன்றால் கண்கள் குளமாகும்
இரவில் துடிப்பேன் தனியாக --=அவர்
இருந்தால் உள்ளம் கனியாகும்
உறவால் அடைந்தேன் புதுக் கோலம் ---எங்கள்
உயிரின் ஆழமோ வெகு நீளம்
அவரை எண்ணியே மருகுகின்றேன் --காதல்
அன்பை நினைத்து உருகுகின்றேன்
பயிரை வளர்க்கும் வான் மழையே --நான்
பதறித் துடிப்பது என் பிழையே
என்றோ ஒருநாள் வருவாரே ---என்னை
அணைத்து சுகமும் தருவாரே
ஒன்றாய் இணைந்து வாழ்வோமே ---இந்த
உலகில் நற்பெயர் பெறுவோமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக