வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

வான்மழை 586

திருநாள்     வருமோ    தெரியாது   --அந்த
தேவன்    வருகை    அறியாது
மணநாள்   என்று    முடிவாகும்  --இனி
மகிழவே   வாழ்வினில்   விடிவாகும்

வருவேன்    என்றார்    வந்தாரா  ---வாரி
அனைத்து   முத்தமும்   தந்தாரா
அருகில்   இருந்தால்   நலமாகும்   ---என்னை
அகன்றால்    கண்கள்    குளமாகும்

இரவில்    துடிப்பேன்    தனியாக   --=அவர்
இருந்தால்   உள்ளம்   கனியாகும்
உறவால்   அடைந்தேன்   புதுக்  கோலம்  ---எங்கள்
உயிரின்   ஆழமோ   வெகு  நீளம்

அவரை   எண்ணியே    மருகுகின்றேன்  --காதல்
அன்பை    நினைத்து    உருகுகின்றேன்
பயிரை    வளர்க்கும்    வான்  மழையே  --நான்
பதறித்     துடிப்பது     என் பிழையே

என்றோ   ஒருநாள்    வருவாரே   ---என்னை
அணைத்து   சுகமும்    தருவாரே
ஒன்றாய்    இணைந்து   வாழ்வோமே  ---இந்த
உலகில்   நற்பெயர்    பெறுவோமே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக