அன்னை அழகாக சிரித்தாள் --அதில்
அன்பு அலை மோதிக் கிடக்கும்
தென்னை மரம் போல கருணை --அவள்
தேடிக் கிடைக்காத அருமை
விண்ணை அழகாக வடித்தாள் --அங்கு
வெள்ளி நிலவையும் படைத்தாள்
என்னைக் கவியாக்கி சிரித்தாள் --வாழ்வில்
எல்லா நலன்களும் கொடுத்தாள்
வானில் மழையாகப் பொழிவாள் --உழவர்
வாழ்வை சுகமாக்கி மகிழ்வாள்
கானில் விலங்கினம் படைத்தாள் --பல
கவிஞர்கள் திரு நாவில் உறைவாள்
பெண்ணை அழகாகக் கொடுத்தாள் ---அவர்
பெருமை நிலையாக்கிப் புகழ்ந்தாள்
மண்ணை வளமாக்க மலர்வாள் --நம்
மனதில் வரமாக வருவாள்
காலம் உருண்டோடி மறையும் --அவள்
கருணை ஒன்று தான் நிலைக்கும்
நாளைய உலகம் அவள் கையில் --இதனை
நம்பினால் வாழ்விலே உய்யலாம்
அன்பு அலை மோதிக் கிடக்கும்
தென்னை மரம் போல கருணை --அவள்
தேடிக் கிடைக்காத அருமை
விண்ணை அழகாக வடித்தாள் --அங்கு
வெள்ளி நிலவையும் படைத்தாள்
என்னைக் கவியாக்கி சிரித்தாள் --வாழ்வில்
எல்லா நலன்களும் கொடுத்தாள்
வானில் மழையாகப் பொழிவாள் --உழவர்
வாழ்வை சுகமாக்கி மகிழ்வாள்
கானில் விலங்கினம் படைத்தாள் --பல
கவிஞர்கள் திரு நாவில் உறைவாள்
பெண்ணை அழகாகக் கொடுத்தாள் ---அவர்
பெருமை நிலையாக்கிப் புகழ்ந்தாள்
மண்ணை வளமாக்க மலர்வாள் --நம்
மனதில் வரமாக வருவாள்
காலம் உருண்டோடி மறையும் --அவள்
கருணை ஒன்று தான் நிலைக்கும்
நாளைய உலகம் அவள் கையில் --இதனை
நம்பினால் வாழ்விலே உய்யலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக