வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அருமை 543

 அன்னை   அழகாக  சிரித்தாள்  --அதில்
 அன்பு   அலை மோதிக்  கிடக்கும்
  தென்னை  மரம் போல  கருணை  --அவள்
   தேடிக்  கிடைக்காத   அருமை

  விண்ணை   அழகாக  வடித்தாள்  --அங்கு
  வெள்ளி  நிலவையும்  படைத்தாள்
   என்னைக்  கவியாக்கி  சிரித்தாள்  --வாழ்வில்
   எல்லா    நலன்களும்   கொடுத்தாள்

    வானில்  மழையாகப்  பொழிவாள்  --உழவர்
     வாழ்வை   சுகமாக்கி  மகிழ்வாள்
      கானில்    விலங்கினம்  படைத்தாள்  --பல
     கவிஞர்கள்  திரு நாவில்   உறைவாள்

     பெண்ணை   அழகாகக்   கொடுத்தாள்  ---அவர்
     பெருமை   நிலையாக்கிப்  புகழ்ந்தாள்
      மண்ணை  வளமாக்க    மலர்வாள்  --நம்
      மனதில்     வரமாக   வருவாள்

     காலம்  உருண்டோடி   மறையும்  --அவள்
     கருணை  ஒன்று தான்  நிலைக்கும்
     நாளைய   உலகம்  அவள் கையில்  --இதனை
     நம்பினால்   வாழ்விலே   உய்யலாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக