புதன், 15 ஆகஸ்ட், 2018

கண்ணானவன் 566

 வள்ளியின்    கணவன்   பெயரை  --நீயும்
 வாயார     தினமும்   சொல்லு
 வளங்கள்   வந்து    சேருமே  --தங்கமே
 பொங்குமே   இன்பங்கள்   கொஞ்சுமே

 புள்ளி    மயில்    மீதிலேறி   --நம்
 செல்வி   மகன்    வருவான்
 அள்ளி   யள்ளிக்   கொடுப்பான்  --வந்த
 அல்லல்  தன்னை   முடிப்பான்

 கண்கள்   திறந்து   பார்த்திட   --அவன்
 கருணை   மழை   பொழியும்
 கற்பக   மென்றிடும்   அற்புதமவனே  --முருகன்
 பொற்   பதங்கள்   நாடு

 புண்ணியம்    தேடி   வரும்   --நல்ல
 புகழ்      மாலை   நாடி   வரும்
 கண்ணாவான்   நமக்கு   வேலன்  --மக்கள்
 கவலைகளை ப்  போக்கும்   சிவபாலன்

 எத்தனை   துயரம்    வந்திடினும்   -இங்கு
 ஏழை     மக்கள்   நொந்திடினும்
 அத்தனையும்   தீர்ப்பானே   வடிவேலன்  --என்றும் 
 அவனியைக்   காக்கின்ற    அருட்சீலன்

 வள்ளலவன்    பெயர்    கூறு  --உந்தன்
 வாழ்வில்   அடையலாம்  நற்பேறு
 நல்லதே    நடக்கும்    பாரு   --இந்த
 நன்மைகள்   தருவது   யாரு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக