வள்ளியின் கணவன் பெயரை --நீயும்
வாயார தினமும் சொல்லு
வளங்கள் வந்து சேருமே --தங்கமே
பொங்குமே இன்பங்கள் கொஞ்சுமே
புள்ளி மயில் மீதிலேறி --நம்
செல்வி மகன் வருவான்
அள்ளி யள்ளிக் கொடுப்பான் --வந்த
அல்லல் தன்னை முடிப்பான்
கண்கள் திறந்து பார்த்திட --அவன்
கருணை மழை பொழியும்
கற்பக மென்றிடும் அற்புதமவனே --முருகன்
பொற் பதங்கள் நாடு
புண்ணியம் தேடி வரும் --நல்ல
புகழ் மாலை நாடி வரும்
கண்ணாவான் நமக்கு வேலன் --மக்கள்
கவலைகளை ப் போக்கும் சிவபாலன்
எத்தனை துயரம் வந்திடினும் -இங்கு
ஏழை மக்கள் நொந்திடினும்
அத்தனையும் தீர்ப்பானே வடிவேலன் --என்றும்
அவனியைக் காக்கின்ற அருட்சீலன்
வள்ளலவன் பெயர் கூறு --உந்தன்
வாழ்வில் அடையலாம் நற்பேறு
நல்லதே நடக்கும் பாரு --இந்த
நன்மைகள் தருவது யாரு
வாயார தினமும் சொல்லு
வளங்கள் வந்து சேருமே --தங்கமே
பொங்குமே இன்பங்கள் கொஞ்சுமே
புள்ளி மயில் மீதிலேறி --நம்
செல்வி மகன் வருவான்
அள்ளி யள்ளிக் கொடுப்பான் --வந்த
அல்லல் தன்னை முடிப்பான்
கண்கள் திறந்து பார்த்திட --அவன்
கருணை மழை பொழியும்
கற்பக மென்றிடும் அற்புதமவனே --முருகன்
பொற் பதங்கள் நாடு
புண்ணியம் தேடி வரும் --நல்ல
புகழ் மாலை நாடி வரும்
கண்ணாவான் நமக்கு வேலன் --மக்கள்
கவலைகளை ப் போக்கும் சிவபாலன்
எத்தனை துயரம் வந்திடினும் -இங்கு
ஏழை மக்கள் நொந்திடினும்
அத்தனையும் தீர்ப்பானே வடிவேலன் --என்றும்
அவனியைக் காக்கின்ற அருட்சீலன்
வள்ளலவன் பெயர் கூறு --உந்தன்
வாழ்வில் அடையலாம் நற்பேறு
நல்லதே நடக்கும் பாரு --இந்த
நன்மைகள் தருவது யாரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக