பல்லவி
நினைந்தவர் நெஞ்சினில் நீயிருப்பாய் முருகா ---இன்றே
நீல மயிலினில் ஏறியே நிச்சயம் வருவாய் (நினைந்தவர் )
அனுபல்லவி
பணிந்தவர் தமக்கே பதமருள் புரிவாய் --எங்கள்
பன்னிரு கையுடை பாங்கெழில் வேலா (நினைந்தவர் )
சரணங்கள்
வள்ளி மணவாளா வடிவேலா முருகா --உனை
சொல்லி அழைத்தாலே சுப்ரமண்யா வருவாய்
அள்ளிக் கொடுப்பாயே அனைவர்க்கும் வரங்களை --எங்கள்
அம்மை யப்பன் பெற்ற அறுபடைக் குமரா (நினைந்தவர் )
கார்திகைப் பெண்டிரால் கவனமாய் வளர்ந்தாயே --இங்கு
கந்தன் எனும் பெயரில் கருணையைப் பொழிகிறாயே
பார்த்திடும் அடியவர் படும் துயரம் தீரும் --அவர்
பாடி வைத்த தமிழும் பல்லுழகை யாளும்
தேடியே அலைவோர்க்கு தரிசனமும் தருவாய் --நாம்
திருப்புகழ் தன்னை ஓதிட விருப்பமுடன் வருவார்
வாடிய பயிருக்கு வான்மழை யாவதுபோல் --இங்கு
கூடிய மாந்தர்க்கு கோடி நலம் அருள்வார் (நினைந்தவர் 0
கந்தனை நினைத்தால் நாம் கதிபெற வழியுமுண்டு --அவர்
கண்ணருள் பெற்றால் நன்னெறி ஒளியுமுண்டு
வந்தனை செய்தோரை நன்கு வாழ்ந்திட வைப்பார் --என்றும்
வள்ளலாய் நமக்கு நல்ல வல்லமையை யளிப்பார்
நினைந்தவர் நெஞ்சினில் நீயிருப்பாய் முருகா ---இன்றே
நீல மயிலினில் ஏறியே நிச்சயம் வருவாய் (நினைந்தவர் )
அனுபல்லவி
பணிந்தவர் தமக்கே பதமருள் புரிவாய் --எங்கள்
பன்னிரு கையுடை பாங்கெழில் வேலா (நினைந்தவர் )
சரணங்கள்
வள்ளி மணவாளா வடிவேலா முருகா --உனை
சொல்லி அழைத்தாலே சுப்ரமண்யா வருவாய்
அள்ளிக் கொடுப்பாயே அனைவர்க்கும் வரங்களை --எங்கள்
அம்மை யப்பன் பெற்ற அறுபடைக் குமரா (நினைந்தவர் )
கார்திகைப் பெண்டிரால் கவனமாய் வளர்ந்தாயே --இங்கு
கந்தன் எனும் பெயரில் கருணையைப் பொழிகிறாயே
பார்த்திடும் அடியவர் படும் துயரம் தீரும் --அவர்
பாடி வைத்த தமிழும் பல்லுழகை யாளும்
தேடியே அலைவோர்க்கு தரிசனமும் தருவாய் --நாம்
திருப்புகழ் தன்னை ஓதிட விருப்பமுடன் வருவார்
வாடிய பயிருக்கு வான்மழை யாவதுபோல் --இங்கு
கூடிய மாந்தர்க்கு கோடி நலம் அருள்வார் (நினைந்தவர் 0
கந்தனை நினைத்தால் நாம் கதிபெற வழியுமுண்டு --அவர்
கண்ணருள் பெற்றால் நன்னெறி ஒளியுமுண்டு
வந்தனை செய்தோரை நன்கு வாழ்ந்திட வைப்பார் --என்றும்
வள்ளலாய் நமக்கு நல்ல வல்லமையை யளிப்பார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக