திங்கள், 27 ஆகஸ்ட், 2018

நீல மயில் 592

                                 பல்லவி
நினைந்தவர்       நெஞ்சினில்    நீயிருப்பாய்  முருகா  ---இன்றே
 நீல மயிலினில்  ஏறியே    நிச்சயம்   வருவாய்   (நினைந்தவர்  )
                                  அனுபல்லவி
பணிந்தவர்   தமக்கே     பதமருள்   புரிவாய்  --எங்கள்
பன்னிரு   கையுடை    பாங்கெழில்   வேலா    (நினைந்தவர்  )
                                   சரணங்கள்
வள்ளி   மணவாளா    வடிவேலா   முருகா  --உனை
சொல்லி   அழைத்தாலே   சுப்ரமண்யா   வருவாய்
அள்ளிக்   கொடுப்பாயே   அனைவர்க்கும்   வரங்களை  --எங்கள்
அம்மை  யப்பன்   பெற்ற    அறுபடைக்    குமரா  (நினைந்தவர் )

கார்திகைப்   பெண்டிரால்    கவனமாய்   வளர்ந்தாயே   --இங்கு
கந்தன்    எனும்   பெயரில்    கருணையைப்   பொழிகிறாயே
பார்த்திடும்    அடியவர்   படும் துயரம்    தீரும் --அவர்
பாடி     வைத்த    தமிழும்    பல்லுழகை    யாளும்

தேடியே   அலைவோர்க்கு    தரிசனமும்   தருவாய்  --நாம்
திருப்புகழ்    தன்னை  ஓதிட    விருப்பமுடன்   வருவார்
வாடிய   பயிருக்கு    வான்மழை  யாவதுபோல்  --இங்கு
கூடிய    மாந்தர்க்கு     கோடி   நலம்    அருள்வார்   (நினைந்தவர் 0

கந்தனை    நினைத்தால்    நாம்    கதிபெற   வழியுமுண்டு  --அவர்
கண்ணருள்   பெற்றால்    நன்னெறி    ஒளியுமுண்டு
வந்தனை   செய்தோரை   நன்கு   வாழ்ந்திட   வைப்பார்  --என்றும்
வள்ளலாய்     நமக்கு    நல்ல     வல்லமையை    யளிப்பார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக