கண்ணிலாடும் அழகே என் கருத்தில் வடித்த சிலையே -உன்னில்
கரைந்தேன் கனியே உறவு வேண்டும் இனியே
விண்ணில் முளைத்து உலவும் வெள்ளி நிலவோ --நீயும்
வீசிடும் மெல்லிய இளம் தென்றல் காற்றோ
கனிந்த வாழைக் குலையோ அந்த காமன் விடும் கணையோ --நான்
உன்னில் கலக்க வரவா நீ உரிய பதிலைத் தர வா
பரந்த மனமோ உனக்கு சற்று பரிவு காட்டு எனக்கு --உன்னை
பார்த்து ஏங்கித் துடிக்கும் பக்தன் குறைகள் கேளாய்
சிரித்து வாழ்ந்து மகிழ தேவியுனை நினைத்தேன் --அதிக
செல்வம் சேர்த்து நாளும் சீராய் வாழலாம் பெண்ணே
விரித்த தாழை மடலே நீயும் விண்ணிலாடும் மீனே --என்னை
பிரித்தல் பாபம் தோழி நீயும் பெருமை சூழ நீடு வாழி
தொட்டுப் பழகிட எனக்கு நல்ல தோகை துணையும் வேண்டும் --நீ
விட்டுப் பிரிய நினைத்தால் இங்கு வேதனை தான் மிஞ்சும்
கட்டுக் குலையாத மேனி கண்ணைப் பறிக்கும் வாணம் --காஞ்சி
பட்டில் நெய்த பொருளோ எனக்கு பரிவு காட்டி அருளேன்
அள்ளி யள்ளிக் கொடுத்து உலகில் அதிக காலம் வாழ்வோம் --தினம்
கல்விப் பயிரை வளர்க்க நிறையக் காசு பணங்கள் சேர்ப்போம்
பள்ளிகள் பலவும் திறப்போம் பகைமைதனையும் அழிப்போம் --அந்த
பரமனின் அருளினாலே நாமும் பண்புடன் நன்கு ஜொலிப்போம்
கரைந்தேன் கனியே உறவு வேண்டும் இனியே
விண்ணில் முளைத்து உலவும் வெள்ளி நிலவோ --நீயும்
வீசிடும் மெல்லிய இளம் தென்றல் காற்றோ
கனிந்த வாழைக் குலையோ அந்த காமன் விடும் கணையோ --நான்
உன்னில் கலக்க வரவா நீ உரிய பதிலைத் தர வா
பரந்த மனமோ உனக்கு சற்று பரிவு காட்டு எனக்கு --உன்னை
பார்த்து ஏங்கித் துடிக்கும் பக்தன் குறைகள் கேளாய்
சிரித்து வாழ்ந்து மகிழ தேவியுனை நினைத்தேன் --அதிக
செல்வம் சேர்த்து நாளும் சீராய் வாழலாம் பெண்ணே
விரித்த தாழை மடலே நீயும் விண்ணிலாடும் மீனே --என்னை
பிரித்தல் பாபம் தோழி நீயும் பெருமை சூழ நீடு வாழி
தொட்டுப் பழகிட எனக்கு நல்ல தோகை துணையும் வேண்டும் --நீ
விட்டுப் பிரிய நினைத்தால் இங்கு வேதனை தான் மிஞ்சும்
கட்டுக் குலையாத மேனி கண்ணைப் பறிக்கும் வாணம் --காஞ்சி
பட்டில் நெய்த பொருளோ எனக்கு பரிவு காட்டி அருளேன்
அள்ளி யள்ளிக் கொடுத்து உலகில் அதிக காலம் வாழ்வோம் --தினம்
கல்விப் பயிரை வளர்க்க நிறையக் காசு பணங்கள் சேர்ப்போம்
பள்ளிகள் பலவும் திறப்போம் பகைமைதனையும் அழிப்போம் --அந்த
பரமனின் அருளினாலே நாமும் பண்புடன் நன்கு ஜொலிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக