மாலையும் நீயே மங்கலம் நீயே --இங்கு
மங்கையர் வணங்கும் தங்கமும் நீயே
சோலையில் ஆடிடும் சுந்தரம் நீயே --நம்
சொக்கத் தமிழின் சொர்ணமும் நீயே
அம்பிகை நீயும் அருள் புரிவாயே --உன்
ஆலயம் வந்தோம் நீயும் அகம் மகிழ்வாயே
நம்பிக்கை தந்து நீ நலிவைப் போக்கிடுவாயே --உலக
நாயகி நீயே நால் வகை நலம் அருள்வாயே
சிங்கத்தில் வருகின்ற செல்வியும் நீயே --எங்கும்
சீதள நிலவாய்த் திகழ்பவள் நீயே
எங்களின் குறைகள் இனிதே தீர்ப்பாய் --வாடும்
ஏழையைக் காக்கும் நல்ல சீலமும் நீயே
சங்கரன் மனைவி நம் சரவணன் அன்னை --உலகில்
சாற்றிடும் வேதத்தின் தத்துவம் தாயே
எங்கிலும் நிறைந்த ஈஸ்வரி நீயே --இங்கு
இக பர சுகமதை எங்களுக் கருளிடுவாயே
கண்ணீர் துடைத்து காத்திட வருவாய் ---உந்தன்
காலடி தொழுதோம் கதிபெறச் செய்வாய்
பன்னீர் மணக்கும் பங்கயச் செல்வி --உன்
பாதம் பணிந்தோம் பலன் தருவாயே
மங்கையர் வணங்கும் தங்கமும் நீயே
சோலையில் ஆடிடும் சுந்தரம் நீயே --நம்
சொக்கத் தமிழின் சொர்ணமும் நீயே
அம்பிகை நீயும் அருள் புரிவாயே --உன்
ஆலயம் வந்தோம் நீயும் அகம் மகிழ்வாயே
நம்பிக்கை தந்து நீ நலிவைப் போக்கிடுவாயே --உலக
நாயகி நீயே நால் வகை நலம் அருள்வாயே
சிங்கத்தில் வருகின்ற செல்வியும் நீயே --எங்கும்
சீதள நிலவாய்த் திகழ்பவள் நீயே
எங்களின் குறைகள் இனிதே தீர்ப்பாய் --வாடும்
ஏழையைக் காக்கும் நல்ல சீலமும் நீயே
சங்கரன் மனைவி நம் சரவணன் அன்னை --உலகில்
சாற்றிடும் வேதத்தின் தத்துவம் தாயே
எங்கிலும் நிறைந்த ஈஸ்வரி நீயே --இங்கு
இக பர சுகமதை எங்களுக் கருளிடுவாயே
கண்ணீர் துடைத்து காத்திட வருவாய் ---உந்தன்
காலடி தொழுதோம் கதிபெறச் செய்வாய்
பன்னீர் மணக்கும் பங்கயச் செல்வி --உன்
பாதம் பணிந்தோம் பலன் தருவாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக