சனி, 25 ஆகஸ்ட், 2018

அழகா 588

                      பல்லவி
அழகா    உந்தனை    அழைத்தேனே   --அனுதினம்
வாடி   இங்கே   நானும்   இளைத்தேனே  (அழகா )
                      அனுபல்லவி
பல நாள்    உழன்றேன்    தனியாக  --=உன்
பாத மலர்   பணிந்திட   நான்   மறந்தேனா  (அழகா )
                       சரணங்கள்
அழகாய்     வருவாய்    தனியாக --நீ
அருள்வாய்   வரங்கள்   நலமாக
பழமென   திகழ்ந்தாய்   பழனியிலே  --உன்னை
பஜித்தவர்   உயர்வார்   தரணியிலே   (அழகா )

திருநாள்    என்பதும்   உன்னாலே   --உனது
திருப்புகழ்   ஒலிக்கும்   தன்னாலே
முருகா   என்றுனை    அழைத்தாலே   நீயும்
மோட்சத்தை  யருள்வாய்   மனத்தாலே   (அழகா )

தமிழாய்    தரணியில்    வாழ்கின்றாய்   --உன்
தன்னருளால்   எம்மையும்   ஆள்கின்றாய்
அமிழ்தாய்   இனிப்பாய்   அடியவர்க்கே  --நீயும்
அழகிய    மயிலினில்    வருவாயே     (அழகா )

முருகா     என்றால்    அழகாகும்   --வந்த
மோகம்    எல்லாம்   தெளிவாகும்
வருவாய்    வள்ளி   தெய்வ யானையுடன்  --நாங்கள்
 வாழ்வோம்    உன்னால்   நல்ல  வளமையுடன் - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக