கண்ணாளன் வருவார் என்றே நானும்
காலை மாலை பூசை செய்தேன்
இந்நாள் வந்திட்ட போதிலும் --எனோ
என்னவரும் வந்துமே சேரவில்லை
பொன் நகை மேலும் ஆசையில்லை --வேறு
எந்தப் பொருளின் மீதிலும் பற்று இல்லை
கண்ணினைப் போன்ற அவரை விட்டால் --எனக்கு
கதியென உலகில் நல்ல தொரு துணையுமில்லை
சிந்திய கண்ணீர் தினம் சிற்றாறாய் ஓடுதையா --இங்கு
அந்தி முதல் இரவினில் காதல் ஆசைகள் மோதுதையா
பந்தம் மறந்து என்னையே பரிதவிக்க விட்டீரே --நானும்
முந்திய நினைவுகளில் நன்கு மூழ்கித் தவிக்கிறேனே
கட்டியே யணைத்தவரை எந்தக் காலத்திலும் மறப்பேனோ --அவர்
காதலினை மறந்தால் பேதை நான் வாழ்ந்திட என்ன செய்வேன்
கட்டிலில் சுகம் அனைத்தும் எனக்கு கணக்காகத் தந்தாரே --என்னை
விட்டுப் பிரிந்ததினால் வீட்டில் வேதனையில் வாடுகிறேன்
காலம் கடந்தாலும் மனதில் எந்தன் காதல் நிலைத்திருக்கும் --கோல
குமரன் அருள் அவரைக் கொண்டு வந்து இனிமேல் சேர்க்கும்
நாளும் பறந்தாலும் என்றுமென் நாயகனை நான் மறவேன் --உலகில்
நன்றி யெனும் குணமே மாந்தரை பூமியில் நல்லபடி வாழ வைக்கும்
காலை மாலை பூசை செய்தேன்
இந்நாள் வந்திட்ட போதிலும் --எனோ
என்னவரும் வந்துமே சேரவில்லை
பொன் நகை மேலும் ஆசையில்லை --வேறு
எந்தப் பொருளின் மீதிலும் பற்று இல்லை
கண்ணினைப் போன்ற அவரை விட்டால் --எனக்கு
கதியென உலகில் நல்ல தொரு துணையுமில்லை
சிந்திய கண்ணீர் தினம் சிற்றாறாய் ஓடுதையா --இங்கு
அந்தி முதல் இரவினில் காதல் ஆசைகள் மோதுதையா
பந்தம் மறந்து என்னையே பரிதவிக்க விட்டீரே --நானும்
முந்திய நினைவுகளில் நன்கு மூழ்கித் தவிக்கிறேனே
கட்டியே யணைத்தவரை எந்தக் காலத்திலும் மறப்பேனோ --அவர்
காதலினை மறந்தால் பேதை நான் வாழ்ந்திட என்ன செய்வேன்
கட்டிலில் சுகம் அனைத்தும் எனக்கு கணக்காகத் தந்தாரே --என்னை
விட்டுப் பிரிந்ததினால் வீட்டில் வேதனையில் வாடுகிறேன்
காலம் கடந்தாலும் மனதில் எந்தன் காதல் நிலைத்திருக்கும் --கோல
குமரன் அருள் அவரைக் கொண்டு வந்து இனிமேல் சேர்க்கும்
நாளும் பறந்தாலும் என்றுமென் நாயகனை நான் மறவேன் --உலகில்
நன்றி யெனும் குணமே மாந்தரை பூமியில் நல்லபடி வாழ வைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக