வியாழன், 2 ஆகஸ்ட், 2018

நன்றி 539

கண்ணாளன்  வருவார்   என்றே  நானும்
காலை  மாலை   பூசை  செய்தேன்
இந்நாள்   வந்திட்ட  போதிலும் --எனோ
என்னவரும்  வந்துமே   சேரவில்லை

பொன் நகை   மேலும்   ஆசையில்லை --வேறு
எந்தப்   பொருளின்  மீதிலும்  பற்று  இல்லை
கண்ணினைப்  போன்ற  அவரை  விட்டால் --எனக்கு
கதியென   உலகில்  நல்ல  தொரு  துணையுமில்லை

சிந்திய  கண்ணீர்   தினம்  சிற்றாறாய்  ஓடுதையா --இங்கு
அந்தி முதல்  இரவினில்    காதல்  ஆசைகள்  மோதுதையா
பந்தம்   மறந்து   என்னையே  பரிதவிக்க  விட்டீரே  --நானும்
முந்திய  நினைவுகளில்  நன்கு   மூழ்கித்  தவிக்கிறேனே

கட்டியே   யணைத்தவரை   எந்தக்  காலத்திலும்  மறப்பேனோ --அவர்
காதலினை  மறந்தால்  பேதை  நான்   வாழ்ந்திட  என்ன  செய்வேன்
கட்டிலில்  சுகம்  அனைத்தும்  எனக்கு  கணக்காகத்   தந்தாரே --என்னை
விட்டுப்  பிரிந்ததினால்  வீட்டில்  வேதனையில்   வாடுகிறேன்

காலம்  கடந்தாலும்   மனதில்  எந்தன்  காதல்  நிலைத்திருக்கும் --கோல
குமரன்  அருள்   அவரைக்  கொண்டு  வந்து  இனிமேல்  சேர்க்கும்
நாளும்  பறந்தாலும்  என்றுமென்  நாயகனை  நான்  மறவேன் --உலகில்
நன்றி யெனும்  குணமே   மாந்தரை   பூமியில்  நல்லபடி  வாழ  வைக்கும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக