ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

தீபங்கள் 547

 நீரில்     நின்றாடும்   இளமை  --உன்னை
  நினைத்தாலே  மனதிலே    செழுமை
  ஊரில்    உனக்குள்ள    பெருமை  --எனக்கு
  உன்னுறவு   கிடைத்தாலே   அருமை

  கண்ணாலே  என்னையேனோ   கொன்றாய்  --உனது
  கட்டழகாலே   ஆடவரை    வென்றாய்
  பொன்னால்    வடித்து  வைத்த   பதுமை  --அவளை
  புரிந்து   கொள்பவருக்கு    வரும்    நன்மை

  தெருவில்   தேர் போல     வருவாய்  --அந்த
  திகைப்பில்   பல பேர்கள்   துடிப்பார்
  ஊரும்    உனக்கென்றால்   படியும்  --உன்
  உறவில்    என் வாழ்வும்    விடியும்

   கா தல்      வலை வீசிக்     கொல்லு  --உனது
   கருணை     எனக்கென்று   சொல்லு
   போதும்    நானிங்கு   சரணம்  ---இதை
    புரிந்து   நீயுமிங் கு    வரணும்

    நாளும்    உறவாடி    மகிழ்வோம்  --வரும்
    நாளினை    நமதாக்கி    வாழ்வோம்
    வீழும்     கண்ணீரை    மாற்று   --பொழுது
    விளங்கத்    தீபங்கள்    ஏற்று














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக