நிலவில் ஆடும் குமுதமே ---என்
நெஞ்சில் ஊறும் அமுதமே
கலையில் வாழும் நளினமே --இரும்பை
கவரும் என்றும் காந்தமே
பனியின் வாடைக் காற்றிலே ---அந்த
பளிங்கு மேடை நடுவிலே
தனிமையில் சுகமும் எப்படி --நீயும்
தள்ளிப் போவதும் தப்படி
கொடுத்துச் சிவந்த முகத்திலே --உந்தன்
கொள்ளை அழகு சிரிப்பிலே
தவறியே விழுந்தவன் நானடி ---நான்
தழுவி யணைப்பதும் தவறோடி
வானம் நமக்கு சாட்சியே ---இது
வசந்த கால ஆட்சியே
கானம் பாடி ஆடலாம் ---நாமும்
காதல் உறவில் மகிழலாம்
இரவில் பூக்கும் உறவுகள் ---அது
இளமை செய்யும் நினைவுகள்
வரவை மீறும் செலவுகள் ---நம்
வாழ்வில் நிறையக் கனவுகள்
நல்ல காலம் வந்திடும் ---உலகில்
நன்றி என்றும் வாழ்ந்திடும்
கள்ளம் மறந்து ஆடலாம் ---தெய்வ
கருணை நம்மைக் காக்கலாம்
நெஞ்சில் ஊறும் அமுதமே
கலையில் வாழும் நளினமே --இரும்பை
கவரும் என்றும் காந்தமே
பனியின் வாடைக் காற்றிலே ---அந்த
பளிங்கு மேடை நடுவிலே
தனிமையில் சுகமும் எப்படி --நீயும்
தள்ளிப் போவதும் தப்படி
கொடுத்துச் சிவந்த முகத்திலே --உந்தன்
கொள்ளை அழகு சிரிப்பிலே
தவறியே விழுந்தவன் நானடி ---நான்
தழுவி யணைப்பதும் தவறோடி
வானம் நமக்கு சாட்சியே ---இது
வசந்த கால ஆட்சியே
கானம் பாடி ஆடலாம் ---நாமும்
காதல் உறவில் மகிழலாம்
இரவில் பூக்கும் உறவுகள் ---அது
இளமை செய்யும் நினைவுகள்
வரவை மீறும் செலவுகள் ---நம்
வாழ்வில் நிறையக் கனவுகள்
நல்ல காலம் வந்திடும் ---உலகில்
நன்றி என்றும் வாழ்ந்திடும்
கள்ளம் மறந்து ஆடலாம் ---தெய்வ
கருணை நம்மைக் காக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக