வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கானம் பாடி 571

நிலவில்   ஆடும்   குமுதமே  ---என்
நெஞ்சில்  ஊறும்   அமுதமே
கலையில்  வாழும்   நளினமே  --இரும்பை
கவரும்   என்றும்    காந்தமே

பனியின்    வாடைக்   காற்றிலே  ---அந்த
பளிங்கு    மேடை    நடுவிலே
தனிமையில்   சுகமும்   எப்படி   --நீயும்
தள்ளிப்     போவதும்    தப்படி

கொடுத்துச்  சிவந்த   முகத்திலே   --உந்தன்
கொள்ளை   அழகு    சிரிப்பிலே
தவறியே    விழுந்தவன்   நானடி  ---நான்
தழுவி    யணைப்பதும்   தவறோடி

வானம்     நமக்கு    சாட்சியே ---இது
வசந்த    கால    ஆட்சியே
கானம்   பாடி    ஆடலாம்  ---நாமும்
காதல்    உறவில்    மகிழலாம்

இரவில்   பூக்கும்    உறவுகள்  ---அது
இளமை   செய்யும்   நினைவுகள்
வரவை    மீறும்    செலவுகள்  ---நம்
வாழ்வில்   நிறையக்   கனவுகள்

நல்ல     காலம்   வந்திடும் ---உலகில்
நன்றி  என்றும்  வாழ்ந்திடும்
கள்ளம்   மறந்து   ஆடலாம் ---தெய்வ
கருணை    நம்மைக்    காக்கலாம்

                                                                           
                                                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக