திரு நாள் வருமா அது தேன் சுவை பெறுமா ---மண
நாள் வந்திடில் ஒரு மகிழ்வினைத் தருமா
வரு நாள் தன்னில் என் வாசலில் நிற்பேன் ---புது
வண்ணத்தில் கோலம் நான் வரிசையாய் இடுவேன்
கண்ணாலே மாலையும் கழுத்தினில் இடுவேன் --ஆனந்த
கண்ணீரை உனக்கு காணிக்கை வைப்பேன்
பொன்னாலே நகைகள் புதுமையாய் சூடுவேன் ---நான்
அந்நாளில் என்னையே அர்ப்பணம் செய்வேன்
வளையல்கள் சப்தம் வகை இல்லா முத்தம் ---உனக்கு
வட்டிக்கு வட்டியாய் வாரிக் கொடுப்பேன்
கலை யாடும் நிலவில் கை கோர்த்து நடப்போம் ---எந்தன்
கண்ணாளன் மடியில் தலை வைத்துப் படுப்பேன்
இடையினை வளைத்து இருப்பதைக் கொடுப்பேன் ---நல்ல
இளநீரின் சுவையில் இகலோகம் மறக்கும்
தடை இல்லாச் சான்றிதழ் தருவேனே கண்ணா ---உன்னை
தழுவியே யணைத்து நானும் தாயாவேன் மன்னா
கட்டிலில் தொடங்கி த் தொட்டிலில் வளரும் ---நம்
கண்ணான கண்ணிற்கு காதணி இடுவோம்
இட்டமுடன் பிள்ளைக்கு நல்ல இனிப்புகள் தருவோம் --உந்தன்
இல்லற ஜோதியாய் நான் எந்நாளும் வாழ்வேன்
நாள் வந்திடில் ஒரு மகிழ்வினைத் தருமா
வரு நாள் தன்னில் என் வாசலில் நிற்பேன் ---புது
வண்ணத்தில் கோலம் நான் வரிசையாய் இடுவேன்
கண்ணாலே மாலையும் கழுத்தினில் இடுவேன் --ஆனந்த
கண்ணீரை உனக்கு காணிக்கை வைப்பேன்
பொன்னாலே நகைகள் புதுமையாய் சூடுவேன் ---நான்
அந்நாளில் என்னையே அர்ப்பணம் செய்வேன்
வளையல்கள் சப்தம் வகை இல்லா முத்தம் ---உனக்கு
வட்டிக்கு வட்டியாய் வாரிக் கொடுப்பேன்
கலை யாடும் நிலவில் கை கோர்த்து நடப்போம் ---எந்தன்
கண்ணாளன் மடியில் தலை வைத்துப் படுப்பேன்
இடையினை வளைத்து இருப்பதைக் கொடுப்பேன் ---நல்ல
இளநீரின் சுவையில் இகலோகம் மறக்கும்
தடை இல்லாச் சான்றிதழ் தருவேனே கண்ணா ---உன்னை
தழுவியே யணைத்து நானும் தாயாவேன் மன்னா
கட்டிலில் தொடங்கி த் தொட்டிலில் வளரும் ---நம்
கண்ணான கண்ணிற்கு காதணி இடுவோம்
இட்டமுடன் பிள்ளைக்கு நல்ல இனிப்புகள் தருவோம் --உந்தன்
இல்லற ஜோதியாய் நான் எந்நாளும் வாழ்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக