திங்கள், 20 ஆகஸ்ட், 2018

இல்லற ஜோதி 576

திரு நாள்   வருமா  அது  தேன் சுவை   பெறுமா ---மண
 நாள்    வந்திடில்    ஒரு   மகிழ்வினைத்   தருமா
 வரு நாள்    தன்னில்   என்  வாசலில்   நிற்பேன் ---புது
 வண்ணத்தில்   கோலம்  நான்  வரிசையாய்   இடுவேன்

  கண்ணாலே     மாலையும்   கழுத்தினில்   இடுவேன்  --ஆனந்த
  கண்ணீரை    உனக்கு    காணிக்கை   வைப்பேன்
  பொன்னாலே   நகைகள்   புதுமையாய்   சூடுவேன்  ---நான்
  அந்நாளில்    என்னையே    அர்ப்பணம்   செய்வேன்

  வளையல்கள்   சப்தம்    வகை இல்லா  முத்தம் ---உனக்கு
  வட்டிக்கு    வட்டியாய்    வாரிக்    கொடுப்பேன்
  கலை யாடும்    நிலவில்    கை கோர்த்து   நடப்போம்  ---எந்தன்
  கண்ணாளன்    மடியில்    தலை  வைத்துப்   படுப்பேன்

  இடையினை    வளைத்து   இருப்பதைக்   கொடுப்பேன்  ---நல்ல
  இளநீரின்    சுவையில்     இகலோகம்    மறக்கும்
  தடை இல்லாச்     சான்றிதழ்   தருவேனே   கண்ணா ---உன்னை
  தழுவியே    யணைத்து  நானும்   தாயாவேன்   மன்னா

  கட்டிலில்    தொடங்கி த்    தொட்டிலில்    வளரும்  ---நம்
  கண்ணான    கண்ணிற்கு    காதணி   இடுவோம்
  இட்டமுடன்    பிள்ளைக்கு  நல்ல  இனிப்புகள்   தருவோம்  --உந்தன்
  இல்லற      ஜோதியாய்  நான்    எந்நாளும்     வாழ்வேன்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக