செவ்வாய், 31 ஜூலை, 2018

சித்தம் 536

வானில்   ஓடிடும்  நிலவு --புதிய
வர்ண       ஜாலம்   காட்டுது
தேனில்    நனைந்த  மலர்கள்  --எதனை
திரும்பிப்  பார்த்துச்  சிரிக்குது

வயலில்  நீந்தும்    தவளைகள்  --வெறும்
வரட்டுக்  கூச்சல்  போடுது
கயல்  எனப்படும்  மீன்களோ --இன்னும்
காதல்  கதைகள்    பேசுது

கண்களை  சிமிட்டும்  வான்சுடர் கள்  --நல்ல
தாளக்    கச்சேரி   நடத்து து
விண்ணில்  உலவும்  மேகங்கள் --பொழு து
விடியும் வரை   காவல்  செய்யுது

காட்டில்  வாழும்  மிருகங்கள் --தங்கள்
காதல்    பாட்டினைத்  துவங்குது
வேட்டை  யாடிடக்   கிளம்புது  --மற்றவை
விலகி   யலறியே    ஓடுது

ஆணும்  பெண்ணும்  இருவரும்  --தமது
ஆவலினைத்   தீர்க்க  இணைந்தனர்
 ஓசைகள்   அடங்கிப்  போனது  --மண்ணில்
  உண்மைகள்   என்றுமே   வெல்லுது ;

இறைவன்  படைத்திட்ட  உலகிலே  --இங்கு
 எத்தனை   எத்தனை    மாற்றங்கள்
 சித்தம்    தெளிவாய்  மாறலாம்  ---மக்கள்
  சிறப்பான   வாழ்வு    வாழலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக