நிலவாடும் முகமீது நெஞ்சமும் கொஞ்சும் --உன்னை
நினைத்திட நினைத்திட எந்தன் மனம் தஞ்சம்
வலைவீசும் கண்களில் வசமானேன் நானும் --நல்ல
வாசமலர் செவ்வாயில் வழிந்தோடும் தேனும்
கலை பொங்கும் உன்னுடலில் கற்பகக் கனிகள் --அதை
காண்பவர் மயங்கிடில் கணக்கின்றிப் பிணிகள்
வளையாத புருவத்தால் என்னை வளைத்தாயே பெண்ணே --என்றும்
வாழ்நாளில் உன்னோடு வாழ்வேனோ கண்ணே
ஈரெட்டு வயதாலே எனை வென்று விட்டாய் --உன்
இதழுறும் சுவை நீரில் எந்நாளும் மிதப்பேன்
கார் வெட்கும் நீள் கூந்தல் யென் கண்களை மயக்கும் --அழகு
காலடி தொடர்ந்தாலே என்வாழ்வு செழிக்கும்
அலையாடும் உன்பார்வை அடுத்தவரைக் கொல்லும் --நீ
அழகாக வருகையில் நல்ல ஆனந்தம் துள்ளும்
நிலையாக நாம் வாழ நீ மனது வைப்பாய் --உன்னை
நெஞ்சத்தில் சிலை வைத்து நித்தமும் சுமப்பேன்
தமிழாக இனிக்கின்ற தங்க நிற மங்கை --உனது
தயவின்றி என் வாழ்வு தடுமாறும் உண்மை
அமுதாக வந்தென் ஆவலைத் தணிப்பாய் --காதலி
அணைப்பாலே உலகினில் பல்லாண்டு வாழ்வேன்
நினைத்திட நினைத்திட எந்தன் மனம் தஞ்சம்
வலைவீசும் கண்களில் வசமானேன் நானும் --நல்ல
வாசமலர் செவ்வாயில் வழிந்தோடும் தேனும்
கலை பொங்கும் உன்னுடலில் கற்பகக் கனிகள் --அதை
காண்பவர் மயங்கிடில் கணக்கின்றிப் பிணிகள்
வளையாத புருவத்தால் என்னை வளைத்தாயே பெண்ணே --என்றும்
வாழ்நாளில் உன்னோடு வாழ்வேனோ கண்ணே
ஈரெட்டு வயதாலே எனை வென்று விட்டாய் --உன்
இதழுறும் சுவை நீரில் எந்நாளும் மிதப்பேன்
கார் வெட்கும் நீள் கூந்தல் யென் கண்களை மயக்கும் --அழகு
காலடி தொடர்ந்தாலே என்வாழ்வு செழிக்கும்
அலையாடும் உன்பார்வை அடுத்தவரைக் கொல்லும் --நீ
அழகாக வருகையில் நல்ல ஆனந்தம் துள்ளும்
நிலையாக நாம் வாழ நீ மனது வைப்பாய் --உன்னை
நெஞ்சத்தில் சிலை வைத்து நித்தமும் சுமப்பேன்
தமிழாக இனிக்கின்ற தங்க நிற மங்கை --உனது
தயவின்றி என் வாழ்வு தடுமாறும் உண்மை
அமுதாக வந்தென் ஆவலைத் தணிப்பாய் --காதலி
அணைப்பாலே உலகினில் பல்லாண்டு வாழ்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக