வியாழன், 5 ஜூலை, 2018

பல்லாண்டு 503

 நிலவாடும்  முகமீது  நெஞ்சமும்  கொஞ்சும் --உன்னை
நினைத்திட  நினைத்திட எந்தன்  மனம்  தஞ்சம்
வலைவீசும்  கண்களில்  வசமானேன்  நானும் --நல்ல
வாசமலர்  செவ்வாயில்   வழிந்தோடும்  தேனும்

கலை  பொங்கும்  உன்னுடலில்  கற்பகக்  கனிகள் --அதை
காண்பவர்  மயங்கிடில்   கணக்கின்றிப்  பிணிகள்
வளையாத  புருவத்தால்  என்னை   வளைத்தாயே  பெண்ணே  --என்றும்
வாழ்நாளில்  உன்னோடு  வாழ்வேனோ  கண்ணே

ஈரெட்டு  வயதாலே  எனை  வென்று  விட்டாய் --உன்
இதழுறும்  சுவை நீரில்   எந்நாளும்  மிதப்பேன்
கார் வெட்கும்  நீள் கூந்தல்  யென்  கண்களை  மயக்கும் --அழகு
காலடி  தொடர்ந்தாலே   என்வாழ்வு  செழிக்கும்

அலையாடும்  உன்பார்வை  அடுத்தவரைக்  கொல்லும்  --நீ
அழகாக  வருகையில்  நல்ல  ஆனந்தம்  துள்ளும்
நிலையாக  நாம் வாழ  நீ மனது  வைப்பாய் --உன்னை
நெஞ்சத்தில்  சிலை வைத்து   நித்தமும்  சுமப்பேன்

தமிழாக  இனிக்கின்ற   தங்க  நிற  மங்கை --உனது
தயவின்றி  என் வாழ்வு   தடுமாறும்    உண்மை
அமுதாக  வந்தென்   ஆவலைத்   தணிப்பாய்  --காதலி
அணைப்பாலே  உலகினில்   பல்லாண்டு  வாழ்வேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக