அழகான மான் ஒன்று கண்டேன் --அவள்
அருகிலே அன்பாலே நானன்று சென்றேன்
எழில் கொஞ்சும் இளமைப் பருவம் --இன்று
ஈரெட்டு வயதான இன்பத்தின் வடிவம்
கயல் என்னும் கண்களைக் கொண்டாள் --பல
கவிஞர்கள் கற்பனைக்கு விருந்தாக வந்தாள்
புயல் வீசி சாய்ப்பது போல நம்மை --தினம்
புறந் தள்ளித் சிறை வைத்துச் செல்வாள்
விளையாடும் அவள் கைகள் வாழை --அவளது
வாழ்விலே இடமொன்று பெற வேண்டும் நாளை
குலையோடு கனிகள் கொஞ்சும் மரம் தான் --என்
குடும்பத்தின் ஒளிவிளக்கு எந்நாளும் அவள் தான்
தினம் தோறும் நடக்கின்ற அந்தத் திருநாள் --அதில்
தேவியும் எனக்காக தேன் அள்ளித் தருவாள்
கனவிலும் நினையாது பெற்ற கற்கண்டுப் புதையல் --காதல்
கலையினில் அவள்மீது எனக்குத் தான் மை யல்
விதம் விதமாய்ச் செய்வாள் நல் அலங்காரம் --எந்தன்
இல்லத்தில் உள்ளது என்றுமவள் அதிகாரம்
துணையாக வரமாக எனக்கென உலகிலே வந்தாள்---நான்
சுகம் பெறவே என்வாழ்வில் புதிய சொர்க்கத்தைத் தந்தாள்
அருகிலே அன்பாலே நானன்று சென்றேன்
எழில் கொஞ்சும் இளமைப் பருவம் --இன்று
ஈரெட்டு வயதான இன்பத்தின் வடிவம்
கயல் என்னும் கண்களைக் கொண்டாள் --பல
கவிஞர்கள் கற்பனைக்கு விருந்தாக வந்தாள்
புயல் வீசி சாய்ப்பது போல நம்மை --தினம்
புறந் தள்ளித் சிறை வைத்துச் செல்வாள்
விளையாடும் அவள் கைகள் வாழை --அவளது
வாழ்விலே இடமொன்று பெற வேண்டும் நாளை
குலையோடு கனிகள் கொஞ்சும் மரம் தான் --என்
குடும்பத்தின் ஒளிவிளக்கு எந்நாளும் அவள் தான்
தினம் தோறும் நடக்கின்ற அந்தத் திருநாள் --அதில்
தேவியும் எனக்காக தேன் அள்ளித் தருவாள்
கனவிலும் நினையாது பெற்ற கற்கண்டுப் புதையல் --காதல்
கலையினில் அவள்மீது எனக்குத் தான் மை யல்
விதம் விதமாய்ச் செய்வாள் நல் அலங்காரம் --எந்தன்
இல்லத்தில் உள்ளது என்றுமவள் அதிகாரம்
துணையாக வரமாக எனக்கென உலகிலே வந்தாள்---நான்
சுகம் பெறவே என்வாழ்வில் புதிய சொர்க்கத்தைத் தந்தாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக