செவ்வாய், 3 ஜூலை, 2018

கற்கண்டு 501

அழகான  மான்  ஒன்று  கண்டேன் --அவள்
அருகிலே  அன்பாலே  நானன்று  சென்றேன்
எழில்  கொஞ்சும்  இளமைப்  பருவம் --இன்று
ஈரெட்டு  வயதான  இன்பத்தின்  வடிவம்

கயல்    என்னும்  கண்களைக்  கொண்டாள் --பல
கவிஞர்கள்  கற்பனைக்கு  விருந்தாக  வந்தாள் 
புயல்  வீசி  சாய்ப்பது   போல  நம்மை --தினம்
புறந்   தள்ளித்   சிறை  வைத்துச்  செல்வாள்

விளையாடும்  அவள்  கைகள்  வாழை --அவளது
வாழ்விலே  இடமொன்று   பெற  வேண்டும்  நாளை
குலையோடு  கனிகள்  கொஞ்சும்  மரம் தான்  --என்
குடும்பத்தின்  ஒளிவிளக்கு  எந்நாளும்  அவள் தான்

தினம் தோறும்  நடக்கின்ற   அந்தத்  திருநாள் --அதில்
தேவியும்  எனக்காக  தேன்  அள்ளித்  தருவாள்
கனவிலும்  நினையாது  பெற்ற   கற்கண்டுப்  புதையல் --காதல்
கலையினில்  அவள்மீது  எனக்குத்  தான்  மை யல்

விதம்  விதமாய்ச்   செய்வாள்  நல்  அலங்காரம் --எந்தன்
இல்லத்தில்  உள்ளது  என்றுமவள்  அதிகாரம்
துணையாக  வரமாக  எனக்கென  உலகிலே  வந்தாள்---நான்
சுகம் பெறவே  என்வாழ்வில்  புதிய  சொர்க்கத்தைத்  தந்தாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக