செவ்வாய், 10 ஜூலை, 2018

தேவஞானம் 508

                                     பல்லவி
கலை ஞான  வடிவான  கருணை மிகு  வாசன் --அவர்
கண்  பட்டால்  வந்த  கவலைகள்  காற்றிலே  பறக்கும் (கலை )
                                    அனுபல்லவி
அலையாடும்  கூந்தலில்  அம்மங்கை  யாம்  கங்கை --அம்மா
அருளாலே  இந்த  உலகிலே  அனைவர்க்கும்  வளமை  (கலை )
                                     சரணங்கள்
இனிதான  உலகிலே  எங்கும்  இறைவனின்  ஆட்சி --அவரின்
இன்னருளாலே  வாழும்  ஏழைகள்  மீட்சி
முனிவர்கள்  தொழுதிடும்   முழு முதற் ப்  பொருளே --மண்ணில்
மாதம்  மும்மாரி  பொழிந்திட   மறைந்திடும்  துயரே (கலை )

சித்தத்தில்  இருப்பது   சைவ  சீலனின்  நாமம் --அவர்
திருப் பெயர்  சொல்லிடத்  தீமைகள்  விலகும்
பித்தர்  அவரே  நமது  பிறை  சூடன்   அவரே --அன்பில்
நித்தமும்   போற்றிட  அரிதான  நற்கதி  கிடைக்கும்   ((கலை )

மண்ணகம்  சிறப்பது   மகேசன்  தயவு --உன்
மனதிலே  என்றும்  ஏழைக்கும்  உதவு
தன்னலம்  மறந்து  தர்மங்கள்  செய்வாய் --இந்த
தரணியில்  உன்பெயர்  சரித்திரமாய்  நிலைக்கும்  (கலை )

சாந்தியைத்  தருவது  சதா  சிவம்  அல்லவா --நாம்
சத்திய வழி  செல்ல  சகலமும்  செழிக்கும்
மாந்தர்கள்  நலம் பெற  மன்னவனைத்  தொழுவோம் --அவரின்
மனதிலே  இடம்பெற   நல்ல  மனிதராய்  வாழ்வோம்( கலை )
                                                                                                                                                                                                                                                                 





                                                                                                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக