பல்லவி
கலை ஞான வடிவான கருணை மிகு வாசன் --அவர்
கண் பட்டால் வந்த கவலைகள் காற்றிலே பறக்கும் (கலை )
அனுபல்லவி
அலையாடும் கூந்தலில் அம்மங்கை யாம் கங்கை --அம்மா
அருளாலே இந்த உலகிலே அனைவர்க்கும் வளமை (கலை )
சரணங்கள்
இனிதான உலகிலே எங்கும் இறைவனின் ஆட்சி --அவரின்
இன்னருளாலே வாழும் ஏழைகள் மீட்சி
முனிவர்கள் தொழுதிடும் முழு முதற் ப் பொருளே --மண்ணில்
மாதம் மும்மாரி பொழிந்திட மறைந்திடும் துயரே (கலை )
சித்தத்தில் இருப்பது சைவ சீலனின் நாமம் --அவர்
திருப் பெயர் சொல்லிடத் தீமைகள் விலகும்
பித்தர் அவரே நமது பிறை சூடன் அவரே --அன்பில்
நித்தமும் போற்றிட அரிதான நற்கதி கிடைக்கும் ((கலை )
மண்ணகம் சிறப்பது மகேசன் தயவு --உன்
மனதிலே என்றும் ஏழைக்கும் உதவு
தன்னலம் மறந்து தர்மங்கள் செய்வாய் --இந்த
தரணியில் உன்பெயர் சரித்திரமாய் நிலைக்கும் (கலை )
சாந்தியைத் தருவது சதா சிவம் அல்லவா --நாம்
சத்திய வழி செல்ல சகலமும் செழிக்கும்
மாந்தர்கள் நலம் பெற மன்னவனைத் தொழுவோம் --அவரின்
மனதிலே இடம்பெற நல்ல மனிதராய் வாழ்வோம்( கலை )
கலை ஞான வடிவான கருணை மிகு வாசன் --அவர்
கண் பட்டால் வந்த கவலைகள் காற்றிலே பறக்கும் (கலை )
அனுபல்லவி
அலையாடும் கூந்தலில் அம்மங்கை யாம் கங்கை --அம்மா
அருளாலே இந்த உலகிலே அனைவர்க்கும் வளமை (கலை )
சரணங்கள்
இனிதான உலகிலே எங்கும் இறைவனின் ஆட்சி --அவரின்
இன்னருளாலே வாழும் ஏழைகள் மீட்சி
முனிவர்கள் தொழுதிடும் முழு முதற் ப் பொருளே --மண்ணில்
மாதம் மும்மாரி பொழிந்திட மறைந்திடும் துயரே (கலை )
சித்தத்தில் இருப்பது சைவ சீலனின் நாமம் --அவர்
திருப் பெயர் சொல்லிடத் தீமைகள் விலகும்
பித்தர் அவரே நமது பிறை சூடன் அவரே --அன்பில்
நித்தமும் போற்றிட அரிதான நற்கதி கிடைக்கும் ((கலை )
மண்ணகம் சிறப்பது மகேசன் தயவு --உன்
மனதிலே என்றும் ஏழைக்கும் உதவு
தன்னலம் மறந்து தர்மங்கள் செய்வாய் --இந்த
தரணியில் உன்பெயர் சரித்திரமாய் நிலைக்கும் (கலை )
சாந்தியைத் தருவது சதா சிவம் அல்லவா --நாம்
சத்திய வழி செல்ல சகலமும் செழிக்கும்
மாந்தர்கள் நலம் பெற மன்னவனைத் தொழுவோம் --அவரின்
மனதிலே இடம்பெற நல்ல மனிதராய் வாழ்வோம்( கலை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக