அழகான பொன மேனி கண்டேன் --அதனை
அமுதாக அன்றே நானள்ளிக் கொண்டேன்
குமுத மலர் போல் வண்ண ஏழில் முகமும் --கோல
குயில் போன்ற இனிமையைத் கொண்டதும் அவள் குரல்
வாவென்று கண்களால் என்னையும் அழைத்தாள் --என்
வாழ்வினில் அவளையே நல் வரமென்று நினைத்தேன்
தா வென்று கைநீட்டி வந்த தாபத்தில் கேட்டேன் --அந்த
தையலோ அவள் கொண்ட மையலில் தழுவியே நின்றாள்
ஈரெட்டு வயதுள்ள இளமையின் உருவம் --அவளது
இளமையால் எவரையும் இழுக்கின்ற பருவம்
போரிட்டுப் பல பேரை புழுதியில் சாய்த்தாள் --மாய
புன்னகையில் அவளென்னைப் புரட்டியே போட்டாள்
இரவோடு உறவாடி எந்நாளும் கழியும் --என்
இளமைக்கு விருந்தாக அவளால் தான் முடியும்
உறவுக்கு சாட்சியென உன்னதம் கொடுத்தாள் --எனது
உயிருக்கு உயிராக வாழ்வினில் உத்தமி வந்தாள்
ஒன்றாகி இரண்டாகி பின் மூன்றாக ஆவோம் --இந்த
உலகத்தில் நன்றாக உயர்வினில் வாழ்வோம்
நன்றியினை மறவாத நல் லெண்ணம் வேண்டும் --அந்த
நாயகி யருள் புரிய நமக்கு நலமென்றும் கூடும்
அமுதாக அன்றே நானள்ளிக் கொண்டேன்
குமுத மலர் போல் வண்ண ஏழில் முகமும் --கோல
குயில் போன்ற இனிமையைத் கொண்டதும் அவள் குரல்
வாவென்று கண்களால் என்னையும் அழைத்தாள் --என்
வாழ்வினில் அவளையே நல் வரமென்று நினைத்தேன்
தா வென்று கைநீட்டி வந்த தாபத்தில் கேட்டேன் --அந்த
தையலோ அவள் கொண்ட மையலில் தழுவியே நின்றாள்
ஈரெட்டு வயதுள்ள இளமையின் உருவம் --அவளது
இளமையால் எவரையும் இழுக்கின்ற பருவம்
போரிட்டுப் பல பேரை புழுதியில் சாய்த்தாள் --மாய
புன்னகையில் அவளென்னைப் புரட்டியே போட்டாள்
இரவோடு உறவாடி எந்நாளும் கழியும் --என்
இளமைக்கு விருந்தாக அவளால் தான் முடியும்
உறவுக்கு சாட்சியென உன்னதம் கொடுத்தாள் --எனது
உயிருக்கு உயிராக வாழ்வினில் உத்தமி வந்தாள்
ஒன்றாகி இரண்டாகி பின் மூன்றாக ஆவோம் --இந்த
உலகத்தில் நன்றாக உயர்வினில் வாழ்வோம்
நன்றியினை மறவாத நல் லெண்ணம் வேண்டும் --அந்த
நாயகி யருள் புரிய நமக்கு நலமென்றும் கூடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக