திங்கள், 30 ஜூலை, 2018

நாயகி 535

 அழகான   பொன   மேனி    கண்டேன்  --அதனை
  அமுதாக  அன்றே   நானள்ளிக்  கொண்டேன்
   குமுத மலர்  போல்  வண்ண  ஏழில்  முகமும் --கோல
   குயில்  போன்ற  இனிமையைத்  கொண்டதும்  அவள்  குரல்

   வாவென்று  கண்களால்  என்னையும்  அழைத்தாள்  --என்
    வாழ்வினில்  அவளையே  நல்  வரமென்று  நினைத்தேன்
    தா வென்று  கைநீட்டி  வந்த  தாபத்தில்   கேட்டேன்  --அந்த
    தையலோ  அவள்  கொண்ட  மையலில்  தழுவியே  நின்றாள்

    ஈரெட்டு  வயதுள்ள  இளமையின்  உருவம் --அவளது
    இளமையால்  எவரையும்  இழுக்கின்ற   பருவம்
    போரிட்டுப்  பல பேரை  புழுதியில்   சாய்த்தாள்  --மாய
    புன்னகையில்  அவளென்னைப்  புரட்டியே  போட்டாள்

    இரவோடு  உறவாடி  எந்நாளும்  கழியும்  --என்
    இளமைக்கு  விருந்தாக  அவளால் தான் முடியும்
    உறவுக்கு   சாட்சியென   உன்னதம்  கொடுத்தாள்  --எனது
    உயிருக்கு  உயிராக   வாழ்வினில்  உத்தமி  வந்தாள்

    ஒன்றாகி  இரண்டாகி  பின்  மூன்றாக  ஆவோம்  --இந்த
    உலகத்தில்  நன்றாக  உயர்வினில்   வாழ்வோம்
    நன்றியினை  மறவாத  நல் லெண்ணம்  வேண்டும் --அந்த
    நாயகி  யருள்  புரிய  நமக்கு  நலமென்றும்  கூடும்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக