வெள்ளி, 13 ஜூலை, 2018

V பூமாலை 511

 நீராடும்   பொழுது  நெஞ்சில்  நினைத்தேன் --உன்னை
நினைத்து  நினைத்து  நீரிலும்  வியர்த்தேன்
சீரோடு   வாழ்வதற்கு  செல்வமும்  கொடுத்தாய் --எனோ
சிந்தியழ  வைத்துவிட்டு  சிட்டெனப்  பறந்தாய்

ஊரையும்  மறந்தேன்  உணவினைத் துறந்தேன்  --என்
உத்தமன்   நீதந்த  காதல்  உறவினை  நினைத்தேன்
தேரோடும்  தெருவில்  உன்னைத்  தேடியும்  பார்த்தேன் --ஏன்
தென்  படவில்லை  நானோ  திகைப்பின்   எல்லை

எந்நாளும்  உன்னையே  இவளும்  நினைப்பாள் --இந்த
கண்ணாளன்  தன்னையே  கணவனாய்  வ்ரித்தேன்
பொன்னாளும்  எனக்கு  நல்ல  புதையல்  தருமா --நான்
புலம்பலை  மறந்து  வாழ்ந்திட  புன்னகை  வருமா

தந்தாயே  முத்தம்  நானும்  தவிக்கிறேன்  நித்தம் --நீ
தழுவியே  அணைத்திட  வீணாய்  தயக்கம்  எதற்கோ 
வெந்திடும்  மனது   நாம்  விழா  காணும்  வயது --இன்றே
விரைந்து   நீ வந்தே  எந்தன்  வேதனையைத்  தீர்ப்பாய்

கண்ணீரில்  எழுதினேன்  ஒரு  கவிதையில்  கடிதம் --உன்னை
காணாமல்  நானும்  கவலையில்  மடிவேன்
பொன்னான  உன்னையும்  புழுதியில்  எறிந்தேன் --என்
பூமானே  எனக்கு  நீயின்று  புதுமாலை  போட    வா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக