நீராடும் பொழுது நெஞ்சில் நினைத்தேன் --உன்னை
நினைத்து நினைத்து நீரிலும் வியர்த்தேன்
சீரோடு வாழ்வதற்கு செல்வமும் கொடுத்தாய் --எனோ
சிந்தியழ வைத்துவிட்டு சிட்டெனப் பறந்தாய்
ஊரையும் மறந்தேன் உணவினைத் துறந்தேன் --என்
உத்தமன் நீதந்த காதல் உறவினை நினைத்தேன்
தேரோடும் தெருவில் உன்னைத் தேடியும் பார்த்தேன் --ஏன்
தென் படவில்லை நானோ திகைப்பின் எல்லை
எந்நாளும் உன்னையே இவளும் நினைப்பாள் --இந்த
கண்ணாளன் தன்னையே கணவனாய் வ்ரித்தேன்
பொன்னாளும் எனக்கு நல்ல புதையல் தருமா --நான்
புலம்பலை மறந்து வாழ்ந்திட புன்னகை வருமா
தந்தாயே முத்தம் நானும் தவிக்கிறேன் நித்தம் --நீ
தழுவியே அணைத்திட வீணாய் தயக்கம் எதற்கோ
வெந்திடும் மனது நாம் விழா காணும் வயது --இன்றே
விரைந்து நீ வந்தே எந்தன் வேதனையைத் தீர்ப்பாய்
கண்ணீரில் எழுதினேன் ஒரு கவிதையில் கடிதம் --உன்னை
காணாமல் நானும் கவலையில் மடிவேன்
பொன்னான உன்னையும் புழுதியில் எறிந்தேன் --என்
பூமானே எனக்கு நீயின்று புதுமாலை போட வா
நினைத்து நினைத்து நீரிலும் வியர்த்தேன்
சீரோடு வாழ்வதற்கு செல்வமும் கொடுத்தாய் --எனோ
சிந்தியழ வைத்துவிட்டு சிட்டெனப் பறந்தாய்
ஊரையும் மறந்தேன் உணவினைத் துறந்தேன் --என்
உத்தமன் நீதந்த காதல் உறவினை நினைத்தேன்
தேரோடும் தெருவில் உன்னைத் தேடியும் பார்த்தேன் --ஏன்
தென் படவில்லை நானோ திகைப்பின் எல்லை
எந்நாளும் உன்னையே இவளும் நினைப்பாள் --இந்த
கண்ணாளன் தன்னையே கணவனாய் வ்ரித்தேன்
பொன்னாளும் எனக்கு நல்ல புதையல் தருமா --நான்
புலம்பலை மறந்து வாழ்ந்திட புன்னகை வருமா
தந்தாயே முத்தம் நானும் தவிக்கிறேன் நித்தம் --நீ
தழுவியே அணைத்திட வீணாய் தயக்கம் எதற்கோ
வெந்திடும் மனது நாம் விழா காணும் வயது --இன்றே
விரைந்து நீ வந்தே எந்தன் வேதனையைத் தீர்ப்பாய்
கண்ணீரில் எழுதினேன் ஒரு கவிதையில் கடிதம் --உன்னை
காணாமல் நானும் கவலையில் மடிவேன்
பொன்னான உன்னையும் புழுதியில் எறிந்தேன் --என்
பூமானே எனக்கு நீயின்று புதுமாலை போட வா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக