ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஆயிரம் கண்ணுடையாள் 495

                                           பல்லவி
ஆயிரம்  கண்ணுடையாள்  அழகான  மாரி --அவள்
அடியவர்  குறை  தீர   அருளுவான்  வாரி   (ஆயிரம் )
                                           அனுபல்லவி
பாயுமவள்  அம்புகள்   பாவிகளின்  மீதே --தினம்
பக்தர்களைக்  காத்திட  வருவாளே  தாயின்  அன்போடு  (ஆயிரம் )
                                          சரணங்கள்
வேப்பிலை  சரம் கொண்டு   வினைகளை  நீக்குவாள் --தன
விழிகளின்  அசைவாலே  வெற்றிகளைக்  காட்டுவாள்
ஒப்பிடவே  முடியாத   ஓங்கார  சொரூபினி --அவள்
உத்தமி  சித்தினி  பத்தினி  சத்திய  வாணியே  (ஆயிரம் )

மாரி  யம்மன்  வாசலிலே  எங்கும்  மங்கள  கோஜம்  --தம்
மக்கள்  மேல்  கொள்வாள்   என்றும்  மனதிலே  நேசம்
கோரியதை  அருளும்    தேவி  எம்  கோல முத்து  மாரி --இந்த
குவலயம்   காத்து  நிற்கும்  நல்ல  குங்கும  வல்லி   (ஆயிரம் )

கற்பனைக்கு  எட்டாத  கருணையாம்  கற்பக வல்லி  --அவள்
காலடி  தொழுபவர்க்கு   கணக்கின்றித்  தருவாள்
அற்புதங்கள்  நிகழ்த்தும்  எங்கள்  ஆனந்த  வல்லி --அம்மை
பெருமைதனை  நினைத்து  ஆடிடுவோம்  சொல்லி  (ஆயிரம் )

சித்திரைச்  செவ்வாயில்  சிறப்பான  தேரோட்டம் --மங்கள
செல்வியின்  மனங்குளிர   போடிடுவார்  ஆட்டம்
இத்தரை  வாழ்ந்திட   எங்கும்  மழை  பொழிவாள் --இங்கு
ஏழைகள்  நெஞ்சினில்   நெடும்  இமயமாய்  உயர்வாள்  (ஆயிரம் ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக