பல்லவி
ஆயிரம் கண்ணுடையாள் அழகான மாரி --அவள்
அடியவர் குறை தீர அருளுவான் வாரி (ஆயிரம் )
அனுபல்லவி
பாயுமவள் அம்புகள் பாவிகளின் மீதே --தினம்
பக்தர்களைக் காத்திட வருவாளே தாயின் அன்போடு (ஆயிரம் )
சரணங்கள்
வேப்பிலை சரம் கொண்டு வினைகளை நீக்குவாள் --தன
விழிகளின் அசைவாலே வெற்றிகளைக் காட்டுவாள்
ஒப்பிடவே முடியாத ஓங்கார சொரூபினி --அவள்
உத்தமி சித்தினி பத்தினி சத்திய வாணியே (ஆயிரம் )
மாரி யம்மன் வாசலிலே எங்கும் மங்கள கோஜம் --தம்
மக்கள் மேல் கொள்வாள் என்றும் மனதிலே நேசம்
கோரியதை அருளும் தேவி எம் கோல முத்து மாரி --இந்த
குவலயம் காத்து நிற்கும் நல்ல குங்கும வல்லி (ஆயிரம் )
கற்பனைக்கு எட்டாத கருணையாம் கற்பக வல்லி --அவள்
காலடி தொழுபவர்க்கு கணக்கின்றித் தருவாள்
அற்புதங்கள் நிகழ்த்தும் எங்கள் ஆனந்த வல்லி --அம்மை
பெருமைதனை நினைத்து ஆடிடுவோம் சொல்லி (ஆயிரம் )
சித்திரைச் செவ்வாயில் சிறப்பான தேரோட்டம் --மங்கள
செல்வியின் மனங்குளிர போடிடுவார் ஆட்டம்
இத்தரை வாழ்ந்திட எங்கும் மழை பொழிவாள் --இங்கு
ஏழைகள் நெஞ்சினில் நெடும் இமயமாய் உயர்வாள் (ஆயிரம் )
ஆயிரம் கண்ணுடையாள் அழகான மாரி --அவள்
அடியவர் குறை தீர அருளுவான் வாரி (ஆயிரம் )
அனுபல்லவி
பாயுமவள் அம்புகள் பாவிகளின் மீதே --தினம்
பக்தர்களைக் காத்திட வருவாளே தாயின் அன்போடு (ஆயிரம் )
சரணங்கள்
வேப்பிலை சரம் கொண்டு வினைகளை நீக்குவாள் --தன
விழிகளின் அசைவாலே வெற்றிகளைக் காட்டுவாள்
ஒப்பிடவே முடியாத ஓங்கார சொரூபினி --அவள்
உத்தமி சித்தினி பத்தினி சத்திய வாணியே (ஆயிரம் )
மாரி யம்மன் வாசலிலே எங்கும் மங்கள கோஜம் --தம்
மக்கள் மேல் கொள்வாள் என்றும் மனதிலே நேசம்
கோரியதை அருளும் தேவி எம் கோல முத்து மாரி --இந்த
குவலயம் காத்து நிற்கும் நல்ல குங்கும வல்லி (ஆயிரம் )
கற்பனைக்கு எட்டாத கருணையாம் கற்பக வல்லி --அவள்
காலடி தொழுபவர்க்கு கணக்கின்றித் தருவாள்
அற்புதங்கள் நிகழ்த்தும் எங்கள் ஆனந்த வல்லி --அம்மை
பெருமைதனை நினைத்து ஆடிடுவோம் சொல்லி (ஆயிரம் )
சித்திரைச் செவ்வாயில் சிறப்பான தேரோட்டம் --மங்கள
செல்வியின் மனங்குளிர போடிடுவார் ஆட்டம்
இத்தரை வாழ்ந்திட எங்கும் மழை பொழிவாள் --இங்கு
ஏழைகள் நெஞ்சினில் நெடும் இமயமாய் உயர்வாள் (ஆயிரம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக