வசந்த கால மாலையில் --வயல்
வரப்பில் நடந்து போகையில்
அசத்திட எந்தன் எதிரிலே --ஒரு
அன்னம் வந்தது பேரழகிலே
பார்த்த மனதும் துடித்தது --அவளை
பறித்து தின்றிடத் துடித்தது
யார்க்கு அதுவும் வாய்க்குமோ --என்றும்
எனக்கே சொந்தமாய்க் கிடைக்குமோ
கண்களால் என்னையும் அழைக்கிறாள் --அன்பு
காதலைச் சொல்லி இழைகிறாள்
என்ன சொல்வது தெரியலியே --என்
இதயம் துடிப்பது விளங்கலியே
வாரியே அணைப்பேன் மடியிலே --இனி
வாழ்வு எந்தன் அன்புப் பிடியிலே
வேரில் பழுத்த சுவைப் பலா --நான்
விரும்பியே நினைக்கும் வெண்ணிலா
காதல் காதல் காதலே --அவள்
கண்களில் எத்தனை மோதலே
பேதங்கள் மனதினில் இல்லையே --சிலர்
பிரித்திட நினைப்பதும் தொல்லையே
வரப்பில் நடந்து போகையில்
அசத்திட எந்தன் எதிரிலே --ஒரு
அன்னம் வந்தது பேரழகிலே
பார்த்த மனதும் துடித்தது --அவளை
பறித்து தின்றிடத் துடித்தது
யார்க்கு அதுவும் வாய்க்குமோ --என்றும்
எனக்கே சொந்தமாய்க் கிடைக்குமோ
கண்களால் என்னையும் அழைக்கிறாள் --அன்பு
காதலைச் சொல்லி இழைகிறாள்
என்ன சொல்வது தெரியலியே --என்
இதயம் துடிப்பது விளங்கலியே
வாரியே அணைப்பேன் மடியிலே --இனி
வாழ்வு எந்தன் அன்புப் பிடியிலே
வேரில் பழுத்த சுவைப் பலா --நான்
விரும்பியே நினைக்கும் வெண்ணிலா
காதல் காதல் காதலே --அவள்
கண்களில் எத்தனை மோதலே
பேதங்கள் மனதினில் இல்லையே --சிலர்
பிரித்திட நினைப்பதும் தொல்லையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக