புதன், 11 ஜூலை, 2018

வெண்ணிலா 509

வசந்த   கால   மாலையில் --வயல்
வரப்பில்  நடந்து  போகையில்
அசத்திட  எந்தன்  எதிரிலே --ஒரு
அன்னம்  வந்தது  பேரழகிலே

பார்த்த  மனதும்  துடித்தது  --அவளை
பறித்து  தின்றிடத்  துடித்தது
யார்க்கு  அதுவும்  வாய்க்குமோ --என்றும்
எனக்கே  சொந்தமாய்க்  கிடைக்குமோ

கண்களால்  என்னையும்  அழைக்கிறாள் --அன்பு
காதலைச்  சொல்லி  இழைகிறாள்
என்ன  சொல்வது  தெரியலியே --என்
இதயம்  துடிப்பது  விளங்கலியே

வாரியே  அணைப்பேன்  மடியிலே --இனி
வாழ்வு  எந்தன்  அன்புப்  பிடியிலே
வேரில்  பழுத்த  சுவைப்  பலா --நான்
விரும்பியே  நினைக்கும்  வெண்ணிலா

காதல்  காதல்  காதலே --அவள்
கண்களில்  எத்தனை  மோதலே
பேதங்கள்  மனதினில்  இல்லையே --சிலர்
பிரித்திட  நினைப்பதும்  தொல்லையே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக