பல்லவி
காலடியில் வீழ்ந்தோம் எங்கள் கண்ணபெருமானே --உமது
கருணையைப் பொழிந்திடுவாய் கண்ணபெருமானே (காலடியில் )
அனுபல்லவி
சேவடியைப் போற்றிடுவோம் கண்ணபெருமானே --உம்மை
சித்தத்தில் வைக்கின்றோம் கண்ணபெருமானே (காலடியில் )
சரணங்கள்
ஆநிரைகள் காக்க வந்தாய் கண்ணபெருமானே --எங்கள்
ஆயர் குலம் சிறக்க வைத்தாய் கண்ணபெருமானே
வானுறையும் தேவர்களும் வணங்குகிற தெய்வமும் நீங்களே --உலகில்
வந்தபின்னே இன்பமன்றோ வாழ்விலே எங்குமே (காலடியில் )
ராதையின் மனம் கவர்ந்தாய் கண்ணபெருமானே --அன்று
ராஸலீலை புரிந்த எங்கள் ரட்சகனும் தாங்களே
கோதை ஆண்டாளைத் கொண்டவரும் கோபாலரே --இங்கு
கோகுலா ஷ்டமியில் பிறந்த கொற்றவனும் கண்ணனே (காலடியில் )
அடையாத நெடுங்கதவு அமைந்தது உமது வாசல் --தினம்
அன்பர்கள் அங்கே முழங்குவது ஆனந்தமெனும் கூச்சல்
விடையாக வந்தே காக்கும் விண்ணுலக வேந்தரே --நாங்கள்
வேண்டியே நிற்கிறோம் உந்தனருள் நாடியே (காலடியில் )
பாண்டவர் நலம் காக்க பகைவர்களை யழித்தாய் --தர்ம
பத்தினி திரௌபதையைப் பாது காத்த அண்ணலே
வேண்டிடும் அடியார்க்கு வெற்றிகளை யருள்வாய் --நீங்கள்
விண்ணிலே இருந்தாலும் இந்த மண்ணையும் வாழ வைத்தாய் (காலடியில் )
காலடியில் வீழ்ந்தோம் எங்கள் கண்ணபெருமானே --உமது
கருணையைப் பொழிந்திடுவாய் கண்ணபெருமானே (காலடியில் )
அனுபல்லவி
சேவடியைப் போற்றிடுவோம் கண்ணபெருமானே --உம்மை
சித்தத்தில் வைக்கின்றோம் கண்ணபெருமானே (காலடியில் )
சரணங்கள்
ஆநிரைகள் காக்க வந்தாய் கண்ணபெருமானே --எங்கள்
ஆயர் குலம் சிறக்க வைத்தாய் கண்ணபெருமானே
வானுறையும் தேவர்களும் வணங்குகிற தெய்வமும் நீங்களே --உலகில்
வந்தபின்னே இன்பமன்றோ வாழ்விலே எங்குமே (காலடியில் )
ராதையின் மனம் கவர்ந்தாய் கண்ணபெருமானே --அன்று
ராஸலீலை புரிந்த எங்கள் ரட்சகனும் தாங்களே
கோதை ஆண்டாளைத் கொண்டவரும் கோபாலரே --இங்கு
கோகுலா ஷ்டமியில் பிறந்த கொற்றவனும் கண்ணனே (காலடியில் )
அடையாத நெடுங்கதவு அமைந்தது உமது வாசல் --தினம்
அன்பர்கள் அங்கே முழங்குவது ஆனந்தமெனும் கூச்சல்
விடையாக வந்தே காக்கும் விண்ணுலக வேந்தரே --நாங்கள்
வேண்டியே நிற்கிறோம் உந்தனருள் நாடியே (காலடியில் )
பாண்டவர் நலம் காக்க பகைவர்களை யழித்தாய் --தர்ம
பத்தினி திரௌபதையைப் பாது காத்த அண்ணலே
வேண்டிடும் அடியார்க்கு வெற்றிகளை யருள்வாய் --நீங்கள்
விண்ணிலே இருந்தாலும் இந்த மண்ணையும் வாழ வைத்தாய் (காலடியில் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக