வியாழன், 12 ஜூலை, 2018

கண்ணபெருமானே 510

                                         பல்லவி
காலடியில்  வீழ்ந்தோம்  எங்கள்  கண்ணபெருமானே --உமது
கருணையைப்  பொழிந்திடுவாய்  கண்ணபெருமானே  (காலடியில் )
                                         அனுபல்லவி
சேவடியைப்  போற்றிடுவோம்  கண்ணபெருமானே --உம்மை
சித்தத்தில்  வைக்கின்றோம்  கண்ணபெருமானே    (காலடியில் )
                                        சரணங்கள்
ஆநிரைகள்  காக்க  வந்தாய்  கண்ணபெருமானே --எங்கள்
ஆயர் குலம்  சிறக்க  வைத்தாய்  கண்ணபெருமானே
வானுறையும்  தேவர்களும் வணங்குகிற  தெய்வமும்  நீங்களே --உலகில்
வந்தபின்னே  இன்பமன்றோ  வாழ்விலே  எங்குமே   (காலடியில் )

ராதையின்  மனம்  கவர்ந்தாய்  கண்ணபெருமானே --அன்று
ராஸலீலை  புரிந்த  எங்கள்  ரட்சகனும்  தாங்களே
கோதை  ஆண்டாளைத்   கொண்டவரும்   கோபாலரே --இங்கு
கோகுலா    ஷ்டமியில்  பிறந்த  கொற்றவனும்  கண்ணனே  (காலடியில் )

அடையாத  நெடுங்கதவு  அமைந்தது  உமது  வாசல் --தினம்
அன்பர்கள்  அங்கே   முழங்குவது  ஆனந்தமெனும்  கூச்சல்
விடையாக  வந்தே  காக்கும்  விண்ணுலக  வேந்தரே --நாங்கள்
வேண்டியே  நிற்கிறோம்  உந்தனருள்   நாடியே   (காலடியில் )

பாண்டவர்  நலம்  காக்க  பகைவர்களை  யழித்தாய் --தர்ம
பத்தினி திரௌபதையைப்   பாது காத்த   அண்ணலே
வேண்டிடும்  அடியார்க்கு  வெற்றிகளை  யருள்வாய் --நீங்கள்
விண்ணிலே  இருந்தாலும்   இந்த  மண்ணையும்  வாழ வைத்தாய்   (காலடியில் ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக