பல்லவி
வரம் தர வருவான் வடிவேலனெனும் முருகன் --அவனை
வணங்கினால் பெறலாம் வாழ்வினில் நலமே (வரம் )
அனுபல்லவி
பதம் பெறும் நல்ல பலம் வரும் சிவ பார்வதி மகனால் --அவனது
பார்வை பட்டிட வந்த பாபங்கள் பறக்குமே (வரம் )
சரணங்கள்
கையினில் வேலுடன் காவலாய் வருவான் --தன்
காலடி பணிந்தோரைக் கைகொடுத்தும் காப்பான்
உய்திட நல்வழி அந்த உத்தமனே தருவான் --அடியவர்
உள்ளமே கோவிலாய் உவகையில் அமர்வான் (வரம் )
தமிழினைக் காப்பவன் தண்டமிழ்ச் செல்வன் --அவன்
தரணிக்கு கிடைத்த தத்துவப் பொருளாம்
அமிழ்தினும் இனியவன் அன்பர்க்கு உரியவன் --நாம்
அனுதினம் நினைத்திட அமுதமாய் இனிப்பவன் (வரம் )
என்றுமே அழகன் எங்களின் குமரன் --அவனை
இருகரம் தொழுதிட இன்னல்கள் விலகும்
நன்றியைக் காட்டிட நாயகனைப் பணிவோம் --இந்த
நாளிலே அவன்பெயர் நம் நாவிலே ஒலிப்போம் (வரம் )
சொல்லிற்கு அடங்காத சுந்தரன் நம் குமரன் --சோம
சுந்தரர் மகனென ஜொலிப்பவன் கந்தன்
புள்ளி மயில் ஏறிவந்து புவனமதைக் காப்பான் --நாம்
புரிந்து கொண்டால் வரும் புண்ணியம் பல கோடி (வரம் )
வரம் தர வருவான் வடிவேலனெனும் முருகன் --அவனை
வணங்கினால் பெறலாம் வாழ்வினில் நலமே (வரம் )
அனுபல்லவி
பதம் பெறும் நல்ல பலம் வரும் சிவ பார்வதி மகனால் --அவனது
பார்வை பட்டிட வந்த பாபங்கள் பறக்குமே (வரம் )
சரணங்கள்
கையினில் வேலுடன் காவலாய் வருவான் --தன்
காலடி பணிந்தோரைக் கைகொடுத்தும் காப்பான்
உய்திட நல்வழி அந்த உத்தமனே தருவான் --அடியவர்
உள்ளமே கோவிலாய் உவகையில் அமர்வான் (வரம் )
தமிழினைக் காப்பவன் தண்டமிழ்ச் செல்வன் --அவன்
தரணிக்கு கிடைத்த தத்துவப் பொருளாம்
அமிழ்தினும் இனியவன் அன்பர்க்கு உரியவன் --நாம்
அனுதினம் நினைத்திட அமுதமாய் இனிப்பவன் (வரம் )
என்றுமே அழகன் எங்களின் குமரன் --அவனை
இருகரம் தொழுதிட இன்னல்கள் விலகும்
நன்றியைக் காட்டிட நாயகனைப் பணிவோம் --இந்த
நாளிலே அவன்பெயர் நம் நாவிலே ஒலிப்போம் (வரம் )
சொல்லிற்கு அடங்காத சுந்தரன் நம் குமரன் --சோம
சுந்தரர் மகனென ஜொலிப்பவன் கந்தன்
புள்ளி மயில் ஏறிவந்து புவனமதைக் காப்பான் --நாம்
புரிந்து கொண்டால் வரும் புண்ணியம் பல கோடி (வரம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக