கனவோ நனவோ கண்கவர் மாயமோ --இனிய
கற்பனை உலகின் அற்புத நிகழ்வோ
மணமோ மலரோ மயனின் படைப்போ --எங்கும்
மங்கலம் பொங்கிடும் தங்க நிலவோ
சிற்பிகள் வடித்த சித்திரச் சிலையோ --அவள்
செம்மாங் கனியோ நல் செங்கமல செல்வியோ
கற்றவர் வணங்கும் கலைகளின் தலைவியோ --இங்கு
கண்டவர் மயங்கும் கெண்டை விழியோ
கொண்டை அழகோ கொவ்வை இதழோ --அவளது
தண்டை ஒலியோ நம் தமிழின் சுவையோ
பண்டை தமிழரின் பழம் பெரும் சொத்தோ --ஞான
பண்டிதர் போற்றிடும் விண்ணவர் அமுதோ
நீளமுடியால் இந்த நிலத்தை அளப்பவள் --தனது
கோல விழியினால் பிறரைக் கொல்லும் இயல்பினள்
வாழ வைத்திட நல்ல வல்லமை கொண்டவள் --நாம்
வந்தனை செய்திட சொந்தமாய் வருபவள்
இளமையை வைத்து பலர் இதயத்தை பிளப்பவள் --காதல்
ஏக்கத்தைக் கொடுத்து சிலர் தூக்கத்தைக் கெடுப்பவள்
புலவர்கள் பாடிட மகிழ்வில் புன்னகை புரிபவள் --வீணில்
போரிடும் உலகினில் புனிதமாய் திகழ்பவள்
கற்பனை உலகின் அற்புத நிகழ்வோ
மணமோ மலரோ மயனின் படைப்போ --எங்கும்
மங்கலம் பொங்கிடும் தங்க நிலவோ
சிற்பிகள் வடித்த சித்திரச் சிலையோ --அவள்
செம்மாங் கனியோ நல் செங்கமல செல்வியோ
கற்றவர் வணங்கும் கலைகளின் தலைவியோ --இங்கு
கண்டவர் மயங்கும் கெண்டை விழியோ
கொண்டை அழகோ கொவ்வை இதழோ --அவளது
தண்டை ஒலியோ நம் தமிழின் சுவையோ
பண்டை தமிழரின் பழம் பெரும் சொத்தோ --ஞான
பண்டிதர் போற்றிடும் விண்ணவர் அமுதோ
நீளமுடியால் இந்த நிலத்தை அளப்பவள் --தனது
கோல விழியினால் பிறரைக் கொல்லும் இயல்பினள்
வாழ வைத்திட நல்ல வல்லமை கொண்டவள் --நாம்
வந்தனை செய்திட சொந்தமாய் வருபவள்
இளமையை வைத்து பலர் இதயத்தை பிளப்பவள் --காதல்
ஏக்கத்தைக் கொடுத்து சிலர் தூக்கத்தைக் கெடுப்பவள்
புலவர்கள் பாடிட மகிழ்வில் புன்னகை புரிபவள் --வீணில்
போரிடும் உலகினில் புனிதமாய் திகழ்பவள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக