கண்ணிலாடும் கனவும் ஒரு கவிதை யானது --என்
கண்ணாளா உன்னை எண்ணிக் கவலை யானது
பெண்ணாகப் பிறந்தது இங்கு பெரிய பாபமா --நீ
பிரிந்து சென்றால் எனதுயிர் இனியும் தாங்குமா
மனதிற்குள் புகுந்து மயங்க வைத்தாய் --என்
மடிமீது சாய்ந்து மையல் வளர்த்தாய்
நனவானது வாழ்வென நானும் நினைத்தேன் --இனிய
நாயகனோடு வாழ்வதற்கு நாளும் குறித்தேன்
விடியலைத் தேடியே இரவில் விழித்திருப்பேன் --நீயும்
வேதனையைத் தருவாயென்றா நானும் நினைத்திருப்பேன்
இடி விழுந்த மரம் போல் இதயம் வெடித்தேன் --உன்
இனியமுகம் காண்பதற்கே இன்னும் இருப்பேன்
உதய காலம் எனது வாழ்வில் இனியும் வருமா --நான்
உன்னை எண்ணிக் கலங்குவதே எனது வேலையாகுமா
கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் --எனது
காதலனே உன்னை யெண்ணி உடல் வேர்த்திருப்பேன்
எங்கிருந்த போதிலும் நீ திரும்பி வந்திடு --உந்தன்
இருகரத்தால் வாரியணைத்து இன்பம் தந்திடு
பொங்கிவரும் நிலவினையே தூ தூ விடுத்தேன் --நீங்கள்
பொழுதோடு வந்து விட்டால் நானும் புனிதம் அடைவேன்
கண்ணாளா உன்னை எண்ணிக் கவலை யானது
பெண்ணாகப் பிறந்தது இங்கு பெரிய பாபமா --நீ
பிரிந்து சென்றால் எனதுயிர் இனியும் தாங்குமா
மனதிற்குள் புகுந்து மயங்க வைத்தாய் --என்
மடிமீது சாய்ந்து மையல் வளர்த்தாய்
நனவானது வாழ்வென நானும் நினைத்தேன் --இனிய
நாயகனோடு வாழ்வதற்கு நாளும் குறித்தேன்
விடியலைத் தேடியே இரவில் விழித்திருப்பேன் --நீயும்
வேதனையைத் தருவாயென்றா நானும் நினைத்திருப்பேன்
இடி விழுந்த மரம் போல் இதயம் வெடித்தேன் --உன்
இனியமுகம் காண்பதற்கே இன்னும் இருப்பேன்
உதய காலம் எனது வாழ்வில் இனியும் வருமா --நான்
உன்னை எண்ணிக் கலங்குவதே எனது வேலையாகுமா
கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் --எனது
காதலனே உன்னை யெண்ணி உடல் வேர்த்திருப்பேன்
எங்கிருந்த போதிலும் நீ திரும்பி வந்திடு --உந்தன்
இருகரத்தால் வாரியணைத்து இன்பம் தந்திடு
பொங்கிவரும் நிலவினையே தூ தூ விடுத்தேன் --நீங்கள்
பொழுதோடு வந்து விட்டால் நானும் புனிதம் அடைவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக