திங்கள், 16 ஜூலை, 2018

புனிதம் 513

 கண்ணிலாடும்  கனவும்  ஒரு  கவிதை  யானது --என்
கண்ணாளா  உன்னை  எண்ணிக்  கவலை  யானது
பெண்ணாகப்  பிறந்தது  இங்கு  பெரிய  பாபமா --நீ
பிரிந்து  சென்றால்  எனதுயிர்  இனியும்  தாங்குமா

மனதிற்குள்  புகுந்து  மயங்க  வைத்தாய் --என்
மடிமீது  சாய்ந்து  மையல்   வளர்த்தாய்
நனவானது  வாழ்வென  நானும்  நினைத்தேன் --இனிய
நாயகனோடு  வாழ்வதற்கு  நாளும்  குறித்தேன்

விடியலைத்  தேடியே  இரவில்  விழித்திருப்பேன் --நீயும்
வேதனையைத்  தருவாயென்றா  நானும்  நினைத்திருப்பேன்
இடி விழுந்த  மரம் போல்  இதயம்  வெடித்தேன் --உன்
இனியமுகம்  காண்பதற்கே  இன்னும்  இருப்பேன்

உதய காலம்  எனது  வாழ்வில்   இனியும்  வருமா --நான்
உன்னை  எண்ணிக்  கலங்குவதே  எனது  வேலையாகுமா
கதவுகளைத்  திறந்து  வைத்துக்  காத்திருப்பேன் --எனது
காதலனே  உன்னை யெண்ணி   உடல்  வேர்த்திருப்பேன்

எங்கிருந்த  போதிலும்  நீ திரும்பி   வந்திடு --உந்தன்
இருகரத்தால்   வாரியணைத்து  இன்பம்  தந்திடு
பொங்கிவரும்  நிலவினையே  தூ தூ  விடுத்தேன் --நீங்கள்
பொழுதோடு  வந்து  விட்டால்  நானும்  புனிதம்  அடைவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக