திங்கள், 9 ஜூலை, 2018

கனவில்-507

கனவில்  வந்த  கண்மணி  --நீ
காற்றில்  பறந்து  போனதேன்
நினைவில்  என்றும்  நிலைத்தாயே --என்
நெஞ்சம்  உந்தனைத் தேடுதே

அழகு  உருவம்  உன்னது --நல்ல
ஆசை  வார்த்தை  சொன்னது
பழகவே  மனதும்  நினைத்தது --எந்த
பாவி  உன்னைக்  கெடுத்தது

துள்ளித்   திரிந்தாய்  தெருவிலே --உன்னை
தொட்டிடத்  துடித்தேன்  நேரிலே
அள்ளியே  அணைத்திட  ஆசையே --காதல்
அன்பே நீ  பிரிந்ததால்  மோசமே

நானும்  நீயும்   சேரலாம் --இனி
நல்ல  வாழ்வு   காணலாம்
வேளை  வருமென  நினைத்தேனே --அன்று
விலகிட  மனமும்  சலித்தேன்

இந்த  வாழ்க்கை  கொடியது --அதில்
இளமை  என்பதும்  அரியது
நொந்த  மனமும்  ஆறுமா  --நூலிழை
மேனியாள்   எனக்குக்  கிடைக்குமா
                                                                                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக