கனவில் வந்த கண்மணி --நீ
காற்றில் பறந்து போனதேன்
நினைவில் என்றும் நிலைத்தாயே --என்
நெஞ்சம் உந்தனைத் தேடுதே
அழகு உருவம் உன்னது --நல்ல
ஆசை வார்த்தை சொன்னது
பழகவே மனதும் நினைத்தது --எந்த
பாவி உன்னைக் கெடுத்தது
துள்ளித் திரிந்தாய் தெருவிலே --உன்னை
தொட்டிடத் துடித்தேன் நேரிலே
அள்ளியே அணைத்திட ஆசையே --காதல்
அன்பே நீ பிரிந்ததால் மோசமே
நானும் நீயும் சேரலாம் --இனி
நல்ல வாழ்வு காணலாம்
வேளை வருமென நினைத்தேனே --அன்று
விலகிட மனமும் சலித்தேன்
இந்த வாழ்க்கை கொடியது --அதில்
இளமை என்பதும் அரியது
நொந்த மனமும் ஆறுமா --நூலிழை
மேனியாள் எனக்குக் கிடைக்குமா
காற்றில் பறந்து போனதேன்
நினைவில் என்றும் நிலைத்தாயே --என்
நெஞ்சம் உந்தனைத் தேடுதே
அழகு உருவம் உன்னது --நல்ல
ஆசை வார்த்தை சொன்னது
பழகவே மனதும் நினைத்தது --எந்த
பாவி உன்னைக் கெடுத்தது
துள்ளித் திரிந்தாய் தெருவிலே --உன்னை
தொட்டிடத் துடித்தேன் நேரிலே
அள்ளியே அணைத்திட ஆசையே --காதல்
அன்பே நீ பிரிந்ததால் மோசமே
நானும் நீயும் சேரலாம் --இனி
நல்ல வாழ்வு காணலாம்
வேளை வருமென நினைத்தேனே --அன்று
விலகிட மனமும் சலித்தேன்
இந்த வாழ்க்கை கொடியது --அதில்
இளமை என்பதும் அரியது
நொந்த மனமும் ஆறுமா --நூலிழை
மேனியாள் எனக்குக் கிடைக்குமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக