பல்லவி
நிரந்தரம் என்பதால் நிந்தனைத் தொழுதேன் --இங்கு
நீ தரும் பதம் பெற நிம்மதி அடைவேன் (நிரந்தரம் )
அனுபல்லவி
வரம் தரும் வள்ளலே வந்தருள் புரிவாய் --நீ
வந்ததின் பின்னரே அந்த வறுமைகள் விலகும் (நிரந்தரம் )
சரணங்கள்
கரமது கொண்டு வந்த கவலையை மாற்றுவாய் --உனது
கருணையினாலே உலகில் கனமழை பொழிகுவாய்
சுரங்களில் ஏழினை சுகமென இங்கே வைத்தாய் --அதில்
ஸ்ருதியை லயமாக்கி இசையில் சொர்க்கத்தைக் காட்டினாய் (நிரந்தரம் )
காலினைத் தூக்கி அன்று களி நடம் ஆடினாய் --தெய்வ
கன்னியை வென்று எமக்கு களிப்பினை காட்டினாய்
நூலினில் வாழ்ந்திடும் நுண்கலைப் பொருளே -உன்னை
நோக்கிடில் பல்கலை நூறாய் வந்து சேருமே (நிரந்தரம் )
பனி மலை அமர்ந்தவன் வரும் பகைதனை வென்றவன் --அன்பில்
இனியவன் ஈசன்நீ ஏழைக்கும் இகபர ம் அருளுவாய்
முனிவரும் தேவரும் உனதருள் தினம் தேடுவார் --உள்ள
மும்மலம் நீக்கியே அவர்க்கும் மோட்சமும் தருவாய் (நிரந்தரம் )
இனியென்ன துணையென்ன இங்கே எல்லாமே நீ தான் --எமக்கு
இன்னருள் புரிவதில் அன்பு மன்னவன் தேன் தான்
கனிவுடன் அருளினை த் தந்திடு கயிலை யம்பதியே --உன்
காலடி தொழுததால் உலகில் கவலைகள் இனி இல்லையே (நிரந்தரம் )
நிரந்தரம் என்பதால் நிந்தனைத் தொழுதேன் --இங்கு
நீ தரும் பதம் பெற நிம்மதி அடைவேன் (நிரந்தரம் )
அனுபல்லவி
வரம் தரும் வள்ளலே வந்தருள் புரிவாய் --நீ
வந்ததின் பின்னரே அந்த வறுமைகள் விலகும் (நிரந்தரம் )
சரணங்கள்
கரமது கொண்டு வந்த கவலையை மாற்றுவாய் --உனது
கருணையினாலே உலகில் கனமழை பொழிகுவாய்
சுரங்களில் ஏழினை சுகமென இங்கே வைத்தாய் --அதில்
ஸ்ருதியை லயமாக்கி இசையில் சொர்க்கத்தைக் காட்டினாய் (நிரந்தரம் )
காலினைத் தூக்கி அன்று களி நடம் ஆடினாய் --தெய்வ
கன்னியை வென்று எமக்கு களிப்பினை காட்டினாய்
நூலினில் வாழ்ந்திடும் நுண்கலைப் பொருளே -உன்னை
நோக்கிடில் பல்கலை நூறாய் வந்து சேருமே (நிரந்தரம் )
பனி மலை அமர்ந்தவன் வரும் பகைதனை வென்றவன் --அன்பில்
இனியவன் ஈசன்நீ ஏழைக்கும் இகபர ம் அருளுவாய்
முனிவரும் தேவரும் உனதருள் தினம் தேடுவார் --உள்ள
மும்மலம் நீக்கியே அவர்க்கும் மோட்சமும் தருவாய் (நிரந்தரம் )
இனியென்ன துணையென்ன இங்கே எல்லாமே நீ தான் --எமக்கு
இன்னருள் புரிவதில் அன்பு மன்னவன் தேன் தான்
கனிவுடன் அருளினை த் தந்திடு கயிலை யம்பதியே --உன்
காலடி தொழுததால் உலகில் கவலைகள் இனி இல்லையே (நிரந்தரம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக