பல்லவி
அறுபடை வேலனே எங்கள் அழகிய பாலனே --உன்னை
அனுதினம் தொழுதிட நல் ஆனந்தம் பெருகுமே (அறுபடை )
அனுபல்லவி
சிறுவனாய்ப் பழனியில் அன்று சினமுடன் நின்றாய் --நீயும்
சீறியே போரினில் பகைவரை வென்றாய் (அறுபடை )
சரணங்கள்
குலமகள் வள்ளியைக் கொஞ்சிடும் தலைவா --நீ
குறைகளைக் கேட்டதும் அவைகள் மறைந்திடச் செய்குவாய்
கரத்தினில் வேலுடன் இங்கே காற்றென வருவாய் --உன்னை
கண்டதும் கண்களில் கண்ணீர் மழையெனப் பொழியுமே (அறுபடை )
குஞ்சரியை மணந்த குன்றக்குடி வேலா --என்றும்
கும்பிடும் அடியவர் நல்ல நம்பிக்கை பெறுவார்
தஞ்சம் அளித்திடும் தண்ணருள் செல்வமே --தினம்
தயவினைப் பொழிந்தே தாயெனக் காப்பாய் (அறுபடை )
ஆறுமுகம் இன்றி வேறு யாரும் அறிமுகம் இல்லையே --இந்த
அய்யனை அன்றி உய்ந்திட வேறு வழி தொல்லையே
ஏறு மயில் ஏறி வந்தே ஏழையைக் காப்பாய் --எம்
இதயத்தில் கோவில் உனக்கு இனிதே அமைப்போம் (அறுபடை )
தமிழினைக் காக்கவே சங்கத் தலைமையினை ஏற்றாய் -பெற்ற
தந்தைக்கே குருவாய் அன்று தனயன் நீயும் அமைந்தாய்
அமிழ்தினும் இனியவா எங்கள் ஆறுமுக வேலவா --இந்த
அவனியைக் காத்திட இன்றே அன்புடன் வருகவே (அறுபடை )
அறுபடை வேலனே எங்கள் அழகிய பாலனே --உன்னை
அனுதினம் தொழுதிட நல் ஆனந்தம் பெருகுமே (அறுபடை )
அனுபல்லவி
சிறுவனாய்ப் பழனியில் அன்று சினமுடன் நின்றாய் --நீயும்
சீறியே போரினில் பகைவரை வென்றாய் (அறுபடை )
சரணங்கள்
குலமகள் வள்ளியைக் கொஞ்சிடும் தலைவா --நீ
குறைகளைக் கேட்டதும் அவைகள் மறைந்திடச் செய்குவாய்
கரத்தினில் வேலுடன் இங்கே காற்றென வருவாய் --உன்னை
கண்டதும் கண்களில் கண்ணீர் மழையெனப் பொழியுமே (அறுபடை )
குஞ்சரியை மணந்த குன்றக்குடி வேலா --என்றும்
கும்பிடும் அடியவர் நல்ல நம்பிக்கை பெறுவார்
தஞ்சம் அளித்திடும் தண்ணருள் செல்வமே --தினம்
தயவினைப் பொழிந்தே தாயெனக் காப்பாய் (அறுபடை )
ஆறுமுகம் இன்றி வேறு யாரும் அறிமுகம் இல்லையே --இந்த
அய்யனை அன்றி உய்ந்திட வேறு வழி தொல்லையே
ஏறு மயில் ஏறி வந்தே ஏழையைக் காப்பாய் --எம்
இதயத்தில் கோவில் உனக்கு இனிதே அமைப்போம் (அறுபடை )
தமிழினைக் காக்கவே சங்கத் தலைமையினை ஏற்றாய் -பெற்ற
தந்தைக்கே குருவாய் அன்று தனயன் நீயும் அமைந்தாய்
அமிழ்தினும் இனியவா எங்கள் ஆறுமுக வேலவா --இந்த
அவனியைக் காத்திட இன்றே அன்புடன் வருகவே (அறுபடை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக