கனவினில் வந்தவள் எந்தன் காதலி -அன்று
கண்டதால் தானே நானும் முதல் பலி
நனவினில் கிடைக்குமா நல் இன்பம் --பிறரை
நம்பினால் நமக்கு க் கிடைப்பது துன்பம்
முத்தெனப் பற்களைக் காட்டினாள் --அவள்
மோகமெனும் வலையினை வீசினாள்
பொத்தென விழுந்தேன் மடியிலே --காதல்
போதை என்பதின் பிடியிலே
கண்களைக் காட்டியே அழைத்தாள் --நல்ல
கவர்ச்சி மொழியினில் பேசினாள்
திங்களை பூமியை மறந்தேன் --எனோ
தெருவினில் நாய் போல் திரிகிறேன்
மனதினில் கருணையும் இல்லையே --அவளை
மருவிட நினைத்தது தொல்லையே
இனியேது வாழ்வு உலகிலே --நான்
இருப்பதா போவதா தெரியலே
காதல் என்பதும் பொய்யடா --அதனால்
கவலை வருவதும் மெய்யடா
ஆதலால் காதலை மறக்கணும் --நாம்
ஆயிரம் காலம் வாழனும்
கண்டதால் தானே நானும் முதல் பலி
நனவினில் கிடைக்குமா நல் இன்பம் --பிறரை
நம்பினால் நமக்கு க் கிடைப்பது துன்பம்
முத்தெனப் பற்களைக் காட்டினாள் --அவள்
மோகமெனும் வலையினை வீசினாள்
பொத்தென விழுந்தேன் மடியிலே --காதல்
போதை என்பதின் பிடியிலே
கண்களைக் காட்டியே அழைத்தாள் --நல்ல
கவர்ச்சி மொழியினில் பேசினாள்
திங்களை பூமியை மறந்தேன் --எனோ
தெருவினில் நாய் போல் திரிகிறேன்
மனதினில் கருணையும் இல்லையே --அவளை
மருவிட நினைத்தது தொல்லையே
இனியேது வாழ்வு உலகிலே --நான்
இருப்பதா போவதா தெரியலே
காதல் என்பதும் பொய்யடா --அதனால்
கவலை வருவதும் மெய்யடா
ஆதலால் காதலை மறக்கணும் --நாம்
ஆயிரம் காலம் வாழனும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக