வியாழன், 19 ஜூலை, 2018

ஆயிரம் காலம் 519

 கனவினில்  வந்தவள்  எந்தன்  காதலி  -அன்று
கண்டதால்  தானே  நானும்  முதல் பலி
நனவினில்  கிடைக்குமா  நல்  இன்பம் --பிறரை
நம்பினால்  நமக்கு க்  கிடைப்பது  துன்பம்

முத்தெனப்  பற்களைக்  காட்டினாள் --அவள்
மோகமெனும்  வலையினை  வீசினாள்
பொத்தென  விழுந்தேன்  மடியிலே --காதல்
போதை  என்பதின்  பிடியிலே

கண்களைக்  காட்டியே அழைத்தாள்  --நல்ல
கவர்ச்சி  மொழியினில்  பேசினாள்
திங்களை  பூமியை  மறந்தேன் --எனோ
தெருவினில்  நாய் போல்  திரிகிறேன்

மனதினில்  கருணையும்  இல்லையே --அவளை
மருவிட   நினைத்தது  தொல்லையே
இனியேது   வாழ்வு   உலகிலே --நான்
இருப்பதா  போவதா  தெரியலே

காதல்  என்பதும்  பொய்யடா --அதனால்
கவலை  வருவதும்  மெய்யடா
ஆதலால்  காதலை  மறக்கணும் --நாம்
ஆயிரம்  காலம்  வாழனும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக