ஞாயிறு, 8 ஜூலை, 2018

தேவ கானம் 506

கண்ணம்மா  நில்லம்மா  சொல்லம்மா --உன்
கனவினில்  வந்தது  யாரம்மா
நீயம்மா  நானம்மா  நெஞ்சம்மா --தினம் 
நினைத்துத்  தவிக்கிறேன்  மௌனமா

என்னம்மா  உன் பதில்  என்னம்மா --இங்கு
ஏனம்மா  என்மேல்  உனக்கும்  கோபமா
பொன்னம்மா  கருணை  கொஞ்சம்  காட்டம்மா --அதில்
கரைந்து  உருகுவேன்  நானும்  நல்ல வெல்லமா

பின்னமாய்ப்  போனதே  அரிய  வாழ்வம்மா --என்னை
பின் தொடர  வாழ்வில்  உனக்கு  விருப்பமா
மீனம்மா  உந்தன்  மனம்  தேனம்மா --வீணை
மீட்டிட  வருவது  தேவ   கானம்மா

நாளுமா   பொழுதுமா   நாமும்  போவமா --உலகில்
நன்றி  என்பது  எந்நாளும்  வெல்லும்மா
வாழுமா  வளருமா   நமது   காதலம்மா --அது
வாழ்விற்கு  கிடைத்த  நல்ல  வரமம்மா

நீளுமா  நிற்குமா   அழகு  நினைவம்மா --என் 
நெஞ்சில்  வைத்துச்  சுமப்பேன்  நித்தமா
ஆளுமா  அடங்குமா   அன்பு  வெள்ளம் --அந்த
ஆண்டவனின்  அருளில்   மறையும்  கள்ளம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக