சனி, 7 ஜூலை, 2018

தெய்வநாயகி 505

 அலையாடும்  நீரில் கூட   அழகு  மீன்கள்  ஓடும் --எனக்கு
அன்பான  உன்னைக்  காண  நெஞ்சில்  ஆனந்த  வெள்ளமே
கலை எழில்  சூழும்  உன்கண்களும்  கவிதைகள்  பாடுமே --இளம்
கன்னி நீயும்   கண்ணசைக்க  காணுவேன்  சொர்க்கமே

மாடி வீடு  கோடி செல்வம்  மனதில்  என்றும்  நிலைக்குமா --இள
மங்கை  உன்னை  தாரமாக்க  மையலானேன்  போதுமா
தேடி வந்த  செல்வமே நீ   தேன்  வழியும்  பொற்குடம் --இங்கு
தேரினைப்  போல்  நீயும்  வந்தால்  தேனாறும்  பாயுமே

இலை  மறைவுக் கனிகளாலே  எதிரிகளை  வீழ்த்தினாய் --உன்
இளமை யெனும்   பாணம்  கொண்டு  ஏனையெண்டிக்  கொல்கிறாய்
வலையில்  வீழ்ந்த  மானுமானேன்  வடிவழகி   உந்தனாலே --நான்
வாழ்வதற்கு  வழியைக் காட்டு  வள்ளலெனும்  செல்வியே

இளமை  விருந்தை  தினமும்  அருந்த  நினைத்தேன் --அடியே
என்ன  உனக்கு  என்மேல்  வருத்தம்  இன்றேனும்  கூறடி
பழமைக் கதை  பேசிப்  பேசி  பரிதவிக்க விடுவதா --இந்த
பக்தனின்  மனங்குளிர  நீயும்  பக்குவமாய்  அணையடி

காலம்  காலம்  காதல்  செய்வோம் --கற்பனையில்
உலகம்  சுற்றக்   கடும்  பயணம்  போகுவோம்
நாளை  நாளை என்று  நாமும்  நம்பிக்கை  கொள்ளுவோம் --தெய்வ
நாயகி  கருணையாலே  நமக்கு  நல்ல  வாழ்வு  மலருமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக