அலையாடும் நீரில் கூட அழகு மீன்கள் ஓடும் --எனக்கு
அன்பான உன்னைக் காண நெஞ்சில் ஆனந்த வெள்ளமே
கலை எழில் சூழும் உன்கண்களும் கவிதைகள் பாடுமே --இளம்
கன்னி நீயும் கண்ணசைக்க காணுவேன் சொர்க்கமே
மாடி வீடு கோடி செல்வம் மனதில் என்றும் நிலைக்குமா --இள
மங்கை உன்னை தாரமாக்க மையலானேன் போதுமா
தேடி வந்த செல்வமே நீ தேன் வழியும் பொற்குடம் --இங்கு
தேரினைப் போல் நீயும் வந்தால் தேனாறும் பாயுமே
இலை மறைவுக் கனிகளாலே எதிரிகளை வீழ்த்தினாய் --உன்
இளமை யெனும் பாணம் கொண்டு ஏனையெண்டிக் கொல்கிறாய்
வலையில் வீழ்ந்த மானுமானேன் வடிவழகி உந்தனாலே --நான்
வாழ்வதற்கு வழியைக் காட்டு வள்ளலெனும் செல்வியே
இளமை விருந்தை தினமும் அருந்த நினைத்தேன் --அடியே
என்ன உனக்கு என்மேல் வருத்தம் இன்றேனும் கூறடி
பழமைக் கதை பேசிப் பேசி பரிதவிக்க விடுவதா --இந்த
பக்தனின் மனங்குளிர நீயும் பக்குவமாய் அணையடி
காலம் காலம் காதல் செய்வோம் --கற்பனையில்
உலகம் சுற்றக் கடும் பயணம் போகுவோம்
நாளை நாளை என்று நாமும் நம்பிக்கை கொள்ளுவோம் --தெய்வ
நாயகி கருணையாலே நமக்கு நல்ல வாழ்வு மலருமே
அன்பான உன்னைக் காண நெஞ்சில் ஆனந்த வெள்ளமே
கலை எழில் சூழும் உன்கண்களும் கவிதைகள் பாடுமே --இளம்
கன்னி நீயும் கண்ணசைக்க காணுவேன் சொர்க்கமே
மாடி வீடு கோடி செல்வம் மனதில் என்றும் நிலைக்குமா --இள
மங்கை உன்னை தாரமாக்க மையலானேன் போதுமா
தேடி வந்த செல்வமே நீ தேன் வழியும் பொற்குடம் --இங்கு
தேரினைப் போல் நீயும் வந்தால் தேனாறும் பாயுமே
இலை மறைவுக் கனிகளாலே எதிரிகளை வீழ்த்தினாய் --உன்
இளமை யெனும் பாணம் கொண்டு ஏனையெண்டிக் கொல்கிறாய்
வலையில் வீழ்ந்த மானுமானேன் வடிவழகி உந்தனாலே --நான்
வாழ்வதற்கு வழியைக் காட்டு வள்ளலெனும் செல்வியே
இளமை விருந்தை தினமும் அருந்த நினைத்தேன் --அடியே
என்ன உனக்கு என்மேல் வருத்தம் இன்றேனும் கூறடி
பழமைக் கதை பேசிப் பேசி பரிதவிக்க விடுவதா --இந்த
பக்தனின் மனங்குளிர நீயும் பக்குவமாய் அணையடி
காலம் காலம் காதல் செய்வோம் --கற்பனையில்
உலகம் சுற்றக் கடும் பயணம் போகுவோம்
நாளை நாளை என்று நாமும் நம்பிக்கை கொள்ளுவோம் --தெய்வ
நாயகி கருணையாலே நமக்கு நல்ல வாழ்வு மலருமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக