வெள்ளி, 27 ஜூலை, 2018

தேன் நிலா 530

 அவள் ;;வானிலே   தேன்  நிலா   வந்ததே  -நம்         
                  வாழ்வினில்  சுகமதுவும்  தந்ததே

 அவன் ;;வீணிலே  பேசுதல்  நியாயமா --வரும்
                  விரகத்தில்   தவிப்பதும்  பாபமா

 அவள் ;;கண்ணிலே  கண்டதைச்  சொல்வதா --இல்லை
                 காமமும்   உன் கண்களை  மறைக்குதா

 அவன் ;;கண்ணடி     நீயுமென்னைக்  கொல்லாதே  --என்
                 காதலைத்   தள்ளியே  நீ  செல்லாதே

 அவள் ;;ஊரிலே   சொல்வது   புரியுதா --நீ
                 உழைத்திட  வேண்டும்  தெரியுதா

 அவன் ;;கண்ணிலே  காதலைக்  காட்டுறே  --எனோ
                  கசப்பாக  என்னிடம்  பேசறே

அவள் ;;பொறுப்பு  என்பது  விளங்குமா --உனக்கு
                 புத்தி      சொன்னாலே  கசக்குதா

அவன் ;;வாழ்வுக்கு  நீதானே   தேனடி --உன்னை
                  வச்சுக்   காத்திடுவேன்  நானடி

 அவள் ;;வாயடி   கையடி   இங்கு  ஆகுமா --அது
                  வயித்துக்கு  சோறும்  போடுமா

அவன் ;;;சொல்வதைக்  கேட்டு நான்   நடக்கிறேன் --புதிய
                   சொர்க்கத்தை  உனக்கும்  காட்டுறேன்

அவள் ;; வேலையை  தேடிக்கோ  விரைவிலே --உனக்கு
                  விடிய  விடிய  விருந்து தான்   வீட்டிலே

அவன் ;;வேலைக்கு  இன்றே நானும்   போகிறேன் --நீயும்
                  விரும்பும்படி    எந்நாளும்   நடக்கிறேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக