அழகு மயில் நடந்தால் --காணும்
ஆடவர் மனமும் வாடும்
கோலக் குயிலும் கூவும் --கேட்கும்
குவலயம் மயங்கிப் போகும்
இட்ட அடியால் அள ப்பாள் --நம்
இதயக் கதவினைப் பிளப்பாள்
தொட்டிடத் துடிக்கும் இளமை --அந்த
தோகையாள் எவர்க்கும் இனிமை
விழிகளை வீசியே வெல்வாள் --அதில்
விரக தாபங்கள் கொல்லும்
வழிமுறை மறந்திட வைப்பாள் --எவர்க்கும்
வாலிப விருந்தாய் தெரிவாள்
கண்கள் மிகவும் அழகு --அவளது
கருவிழி கொன்றிடும் அம்பு
பெண்ணில் இதுவே புதுமை --அது
பிறரை அழிப்பதும் உண்மை
சிரிக்க சிரிக்கவே முத்து --நல்ல
செந்தாமரை மலர்க் கொத்து
பறித்திட நினைப்பவர் இல்லை --நான்
பார்த்திட வந்ததே தொல்லை
ஆடவர் மனமும் வாடும்
கோலக் குயிலும் கூவும் --கேட்கும்
குவலயம் மயங்கிப் போகும்
இட்ட அடியால் அள ப்பாள் --நம்
இதயக் கதவினைப் பிளப்பாள்
தொட்டிடத் துடிக்கும் இளமை --அந்த
தோகையாள் எவர்க்கும் இனிமை
விழிகளை வீசியே வெல்வாள் --அதில்
விரக தாபங்கள் கொல்லும்
வழிமுறை மறந்திட வைப்பாள் --எவர்க்கும்
வாலிப விருந்தாய் தெரிவாள்
கண்கள் மிகவும் அழகு --அவளது
கருவிழி கொன்றிடும் அம்பு
பெண்ணில் இதுவே புதுமை --அது
பிறரை அழிப்பதும் உண்மை
சிரிக்க சிரிக்கவே முத்து --நல்ல
செந்தாமரை மலர்க் கொத்து
பறித்திட நினைப்பவர் இல்லை --நான்
பார்த்திட வந்ததே தொல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக