திங்கள், 2 ஜூலை, 2018

அழகு மயில் 497

அழகு   மயில்   நடந்தால் --காணும்
ஆடவர்  மனமும்  வாடும்
கோலக்   குயிலும்  கூவும் --கேட்கும்
குவலயம்  மயங்கிப்  போகும்

இட்ட  அடியால்   அள ப்பாள்  --நம்
இதயக்  கதவினைப்  பிளப்பாள்
தொட்டிடத்  துடிக்கும்  இளமை --அந்த
தோகையாள்  எவர்க்கும்  இனிமை

விழிகளை  வீசியே  வெல்வாள் --அதில்
விரக  தாபங்கள்  கொல்லும்
வழிமுறை  மறந்திட  வைப்பாள்  --எவர்க்கும்
வாலிப   விருந்தாய்   தெரிவாள்

கண்கள்  மிகவும்   அழகு  --அவளது
கருவிழி  கொன்றிடும்  அம்பு
பெண்ணில்  இதுவே  புதுமை --அது
பிறரை  அழிப்பதும்  உண்மை

சிரிக்க  சிரிக்கவே   முத்து --நல்ல
செந்தாமரை  மலர்க்   கொத்து
பறித்திட  நினைப்பவர்  இல்லை --நான்
பார்த்திட  வந்ததே  தொல்லை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக