பல்லவி
கதி பெற க் கந்தனே நிந்தனை நினைத்தேன் --நீ
கண்மலர் திறந்திட கவலைகள் மறந்தேன் (கதி )
அனுபல்லவி
மதி தனில் நிலை பெற புள்ளி மயிலினில் வருவாய் --வந்த
மயக்கங்கள் விலகிட மனமருள் புரிவாய் (கதி )
சரணங்கள்
நிதி தர வருவது நம் நீல மயில் முருகனே --நம்
நெஞ்சினில் உறைவது நீள் சடையன் மகனே
கதி யற்றவரைக் காப்பதும் காங்கேய வேலனே --அவனை
காண்பவர் பெறுவதும் கருணையின் பலனே (கதி )
இதம் தர வருபவன் ஏழையர் தலைவன் --நாம்
என்றுமே நினைத்தால் எல்லாமும் தருவான்
சுகம் தர நினைப்பவன் சுப்ரமண்ய மெனும் நேசன் --இங்கு
சூழ்ந்திடும் பகைதனை முற்றிலும் அழிப்பவன் (கதி )
வள்ளியினை மணந்த வானவர் துணைவன் --அந்த
வடிவழகி குஞ்சரிக்கு வாழ்வு தரும் கணவன்
சஷ்டியில் பிறந்தவன் சரவணனாய் ஆனவன் --தமிழ்
சந்தத்தில் பாடினால் வரும் சங்கடம் தீர்ப்பவன் (கதி )
முருகனைக் கும்பிட மூளும் வினை யகலும் --அவன்
முன்வந்து நின்றாலே நல்ல மோட்சமும் கிடைக்கும்
உருகிடும் அடியவர் உள்ளத்திலே உறைவான் --நம்
உன்னதத் தமிழினில் உயிராய் நிறைவான (கதி )
கதி பெற க் கந்தனே நிந்தனை நினைத்தேன் --நீ
கண்மலர் திறந்திட கவலைகள் மறந்தேன் (கதி )
அனுபல்லவி
மதி தனில் நிலை பெற புள்ளி மயிலினில் வருவாய் --வந்த
மயக்கங்கள் விலகிட மனமருள் புரிவாய் (கதி )
சரணங்கள்
நிதி தர வருவது நம் நீல மயில் முருகனே --நம்
நெஞ்சினில் உறைவது நீள் சடையன் மகனே
கதி யற்றவரைக் காப்பதும் காங்கேய வேலனே --அவனை
காண்பவர் பெறுவதும் கருணையின் பலனே (கதி )
இதம் தர வருபவன் ஏழையர் தலைவன் --நாம்
என்றுமே நினைத்தால் எல்லாமும் தருவான்
சுகம் தர நினைப்பவன் சுப்ரமண்ய மெனும் நேசன் --இங்கு
சூழ்ந்திடும் பகைதனை முற்றிலும் அழிப்பவன் (கதி )
வள்ளியினை மணந்த வானவர் துணைவன் --அந்த
வடிவழகி குஞ்சரிக்கு வாழ்வு தரும் கணவன்
சஷ்டியில் பிறந்தவன் சரவணனாய் ஆனவன் --தமிழ்
சந்தத்தில் பாடினால் வரும் சங்கடம் தீர்ப்பவன் (கதி )
முருகனைக் கும்பிட மூளும் வினை யகலும் --அவன்
முன்வந்து நின்றாலே நல்ல மோட்சமும் கிடைக்கும்
உருகிடும் அடியவர் உள்ளத்திலே உறைவான் --நம்
உன்னதத் தமிழினில் உயிராய் நிறைவான (கதி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக