புதன், 18 ஜூலை, 2018

கருணாகரன் 516

                                          பல்லவி
கதி பெற க்  கந்தனே   நிந்தனை  நினைத்தேன்  --நீ
கண்மலர்  திறந்திட  கவலைகள்  மறந்தேன்   (கதி )
                                           அனுபல்லவி
மதி தனில்  நிலை பெற  புள்ளி  மயிலினில்   வருவாய் --வந்த
மயக்கங்கள்   விலகிட  மனமருள்  புரிவாய்  (கதி )
                                           சரணங்கள்
நிதி தர   வருவது  நம்  நீல  மயில்  முருகனே --நம்
நெஞ்சினில்  உறைவது  நீள் சடையன்  மகனே
கதி யற்றவரைக்  காப்பதும்  காங்கேய  வேலனே --அவனை
காண்பவர்   பெறுவதும்  கருணையின்  பலனே  (கதி )

இதம் தர   வருபவன்   ஏழையர்  தலைவன் --நாம்
என்றுமே  நினைத்தால்  எல்லாமும்  தருவான்
சுகம் தர  நினைப்பவன்  சுப்ரமண்ய  மெனும்  நேசன் --இங்கு
சூழ்ந்திடும்  பகைதனை  முற்றிலும்  அழிப்பவன்  (கதி )

வள்ளியினை  மணந்த  வானவர்  துணைவன் --அந்த
வடிவழகி  குஞ்சரிக்கு  வாழ்வு  தரும்  கணவன்
சஷ்டியில்  பிறந்தவன்  சரவணனாய்  ஆனவன் --தமிழ்
சந்தத்தில்   பாடினால்  வரும்  சங்கடம்  தீர்ப்பவன்  (கதி )

முருகனைக்  கும்பிட  மூளும்  வினை  யகலும்  --அவன்
முன்வந்து  நின்றாலே  நல்ல  மோட்சமும்  கிடைக்கும்
உருகிடும்   அடியவர்  உள்ளத்திலே  உறைவான்  --நம்
உன்னதத்  தமிழினில்  உயிராய்  நிறைவான   (கதி ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக