பல்லவி
இந்நாள் இனிதாக இறைவனே அருள்வாய் --தினம்
உன்னைப் பணிவதால் சிறப்புகள் பெறுவேன் (இந்நாள்)
அனுபல்லவி
கண்ணிலாடிடும் மணியே கருணை வடிவே --நீயும்
பொன்னார் மேனியில் புலித் தோல் அணிந்தாய் (இந்நாள் )
சரணங்கள்
கண்கள் மலர்ந்து கவலைகள் தீர்ப்பீர் --இந்த
காசினி எங்கும் கனமழை பொழிவீர்
மண்ணில் வளங்கள் மணம் பெற வைப்பீர் --வாழும்
மாந்தரின் மனதிலே மலர்ச்சியைத் தருவீர் (இந்நாள் )
அம்மையும் அப்பனும் நீ ஆடிடும் தெய்வமே _என்
அகமதில் வைத்து உம்மை அனுதினம் தொழுவேன்
ஐம்பெரும் பூதங்கள் அடக்கிய புனிதரே --உமது
அருளினில் தானே இங்கு அனைத்துயிர் வாழும் (இந்நாள் )
சக்தியினைத் தருவது சதா சிவம் அல்லவா --உம்
சன்னதி வந்திடில் இனிஇங்கு சங்கடம் ஏதய்யா
முக்தியை அருளிடும் மோஹன ரூபனே---வீண்
மோகத்தை நீக்கி நல்ல ஞானத்தை வழங்கிடு (இந்நாள் )
சிவனை நினைப்பவர் தோற்றதும் இல்லை -அந்த
சிவத்தை மறந்தவர் ஜெயிப்பதும் இல்லையே
புவனங்கள் முழுவதும் புண்ணியன் ஆட்சி --அதனை
புரிந்து கொண்டாலே பலர்க்கு புலப்படும் மீட்சி (இந்நாள் )
இந்நாள் இனிதாக இறைவனே அருள்வாய் --தினம்
உன்னைப் பணிவதால் சிறப்புகள் பெறுவேன் (இந்நாள்)
அனுபல்லவி
கண்ணிலாடிடும் மணியே கருணை வடிவே --நீயும்
பொன்னார் மேனியில் புலித் தோல் அணிந்தாய் (இந்நாள் )
சரணங்கள்
கண்கள் மலர்ந்து கவலைகள் தீர்ப்பீர் --இந்த
காசினி எங்கும் கனமழை பொழிவீர்
மண்ணில் வளங்கள் மணம் பெற வைப்பீர் --வாழும்
மாந்தரின் மனதிலே மலர்ச்சியைத் தருவீர் (இந்நாள் )
அம்மையும் அப்பனும் நீ ஆடிடும் தெய்வமே _என்
அகமதில் வைத்து உம்மை அனுதினம் தொழுவேன்
ஐம்பெரும் பூதங்கள் அடக்கிய புனிதரே --உமது
அருளினில் தானே இங்கு அனைத்துயிர் வாழும் (இந்நாள் )
சக்தியினைத் தருவது சதா சிவம் அல்லவா --உம்
சன்னதி வந்திடில் இனிஇங்கு சங்கடம் ஏதய்யா
முக்தியை அருளிடும் மோஹன ரூபனே---வீண்
மோகத்தை நீக்கி நல்ல ஞானத்தை வழங்கிடு (இந்நாள் )
சிவனை நினைப்பவர் தோற்றதும் இல்லை -அந்த
சிவத்தை மறந்தவர் ஜெயிப்பதும் இல்லையே
புவனங்கள் முழுவதும் புண்ணியன் ஆட்சி --அதனை
புரிந்து கொண்டாலே பலர்க்கு புலப்படும் மீட்சி (இந்நாள் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக