வாழ்வினில் காதல் வருமா --நல்
வசந்தமும் அதிலே வருமா
சூழ்ந்தது என்னமோ சோகம் --என்
சுந்தரி உன்மேலே மோகம்
இரவில் எழுந்து சிரிப்பேன் --உன்னை
இருகரம் கொண்டு அணைப்பேன்
துறவெனும் நிலையினைத் துறந்தேன் --உனது
துடியிடை கண்டு நான் துடித்தேன்
வளைக்கரத்தால் எந்தனை வளைத்தாய் --உன்
வாலிப அழகினால் மலைத்தேன்
கலைஎழில் பருவம் காட்டினாய் --என்
கண்களில் தீயினை ஏன் மூட்டினாய்
சிரித்து சிரித்துமே என்னைக் கெடுத்தாய் --என்
சிந்தனை முழுவதும் நிறைந்தாய்
பிரித்துப் பார்த்திடத் தெரியலே --வந்த
பித்தமும் எனக்கின்னும் தீரல்லே
வாழ்ந்திட வந்திடு என் கண்மணி --நல்ல
வாழ்வுக்கு உயிரான அன்புப் பொன்மணி
சூழ்ந்திடும் பொழுதும் இன்பமே --எந்தன்
சொர்க்கமே உன்னிடம் நானும் தஞ்சமே
ஓருடல் ஈருயிர் என்றெனக் காணுவோம் --நம்
உன்னதக் காதலைப் போற்றுவோம்
பேருடன் பெருமைகள் சூழலாம் --சிவ
பெருமான் அருளினால் வாழலாம்
வசந்தமும் அதிலே வருமா
சூழ்ந்தது என்னமோ சோகம் --என்
சுந்தரி உன்மேலே மோகம்
இரவில் எழுந்து சிரிப்பேன் --உன்னை
இருகரம் கொண்டு அணைப்பேன்
துறவெனும் நிலையினைத் துறந்தேன் --உனது
துடியிடை கண்டு நான் துடித்தேன்
வளைக்கரத்தால் எந்தனை வளைத்தாய் --உன்
வாலிப அழகினால் மலைத்தேன்
கலைஎழில் பருவம் காட்டினாய் --என்
கண்களில் தீயினை ஏன் மூட்டினாய்
சிரித்து சிரித்துமே என்னைக் கெடுத்தாய் --என்
சிந்தனை முழுவதும் நிறைந்தாய்
பிரித்துப் பார்த்திடத் தெரியலே --வந்த
பித்தமும் எனக்கின்னும் தீரல்லே
வாழ்ந்திட வந்திடு என் கண்மணி --நல்ல
வாழ்வுக்கு உயிரான அன்புப் பொன்மணி
சூழ்ந்திடும் பொழுதும் இன்பமே --எந்தன்
சொர்க்கமே உன்னிடம் நானும் தஞ்சமே
ஓருடல் ஈருயிர் என்றெனக் காணுவோம் --நம்
உன்னதக் காதலைப் போற்றுவோம்
பேருடன் பெருமைகள் சூழலாம் --சிவ
பெருமான் அருளினால் வாழலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக