கண்ணிலே தெரிவாயோ கன்னி இளமானே --இங்கு
காதலிலே துடிக்கிறேனே கவலையில் நானே
பொன்னிலே பூத்தவளே புன்னகை மலரே --நீ
பூமிக்கு வந்திட்ட வெண்ணிலவு தானே
அம்பு விழி அழகால் ஆடவரை வென்றாய் --நான்
அடிபணிய உந்தன் மனம் இளகிடுமோ பெண்ணே
கம்பனுக்கு புகழ் கொடுத்த கன்னித் தமிழ் போல --இனி
எந்தனுக்கு அருள் செய்ய எண்ணிடுவாய் கண்ணே
கரம் பிடித்து சுரம் சேர்க்க நல்ல காலம் வந்தது --உன்
கயல் விழிகள் பட்டதால் எனக்குள் காமம் சுரந்தது
வரம் தரவே வந்திடுக எந்தன் வஞ்சி இள மானே --நான்
வாசலிலே நிற்பேனே என் வள்ளல் உன்னைத் தேடி
மனம் கொண்ட நினைவுகள் மணமாக வைப்பாய் --உன்
மை விழியால் எனை அணைத்து மயங்கிட செய்வாய்
கனி தரும் சுவையெலாம் கன்னி இதழிற் கீடோ --நானும்
கவிஞனாக மாறினேனே உன்மேல் கவிதைகள் பாட
ஒன்றுக்குள் ஒன்றாகி இனிய உறவினைக் கண்டோம் --உள்ள
சுகம் அத்தனையும் நாம் ஒரு நாளில் மகிழ்வோம்
என்றும் இந்த வாழ்வினில் நல்ல இன்பங்கள் காண்போம் --அதை
இறைவனின் அருளாலே நிலையாய் இங்கே இனிதாக வாழ்வோம்
காதலிலே துடிக்கிறேனே கவலையில் நானே
பொன்னிலே பூத்தவளே புன்னகை மலரே --நீ
பூமிக்கு வந்திட்ட வெண்ணிலவு தானே
அம்பு விழி அழகால் ஆடவரை வென்றாய் --நான்
அடிபணிய உந்தன் மனம் இளகிடுமோ பெண்ணே
கம்பனுக்கு புகழ் கொடுத்த கன்னித் தமிழ் போல --இனி
எந்தனுக்கு அருள் செய்ய எண்ணிடுவாய் கண்ணே
கரம் பிடித்து சுரம் சேர்க்க நல்ல காலம் வந்தது --உன்
கயல் விழிகள் பட்டதால் எனக்குள் காமம் சுரந்தது
வரம் தரவே வந்திடுக எந்தன் வஞ்சி இள மானே --நான்
வாசலிலே நிற்பேனே என் வள்ளல் உன்னைத் தேடி
மனம் கொண்ட நினைவுகள் மணமாக வைப்பாய் --உன்
மை விழியால் எனை அணைத்து மயங்கிட செய்வாய்
கனி தரும் சுவையெலாம் கன்னி இதழிற் கீடோ --நானும்
கவிஞனாக மாறினேனே உன்மேல் கவிதைகள் பாட
ஒன்றுக்குள் ஒன்றாகி இனிய உறவினைக் கண்டோம் --உள்ள
சுகம் அத்தனையும் நாம் ஒரு நாளில் மகிழ்வோம்
என்றும் இந்த வாழ்வினில் நல்ல இன்பங்கள் காண்போம் --அதை
இறைவனின் அருளாலே நிலையாய் இங்கே இனிதாக வாழ்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக