பல்லவி
அழகிய தோளினன் அன்பினில் சீலன் --நாம்
அனுதினம் வணங்கிட அருள் தரும் பாலன் (அழகிய )
அனுபல்லவி
பழமுதிர் சோலையில் சிவப் பழமென முருகன் --அவனை
பணிந்திட வரம் தரும் பரம தயாளன் (அழகிய )
சரணங்கள்
நினைத்தவர் நெஞ்சினில் நிலையாய் இருப்பான் --நாம்
நேர்வழி நடந்திட துணையாய் வருவான்
வினைகளை அழித்து நல் வெற்றிகள் தருவான் --தன்னை
வேண்டிடும் மாந்தர்க்கு தூண்டுதல் புரிவான் (அழகிய )
இதம் தரும் சொல்லினால் ஏழையைக் காப்பான் --அவரது
இன்னல்கள் நீக்கி வாழ்வில் நன்னலம் சேர்ப்பான்
உதவிகள் கேட்டிடில் உடன் ஓடியே வருவான் --அந்த
உத்தமன் சத்தியன் நாம் நித்தமும் தொழுவோம் (அழகிய )
மயிலினில் வந்தே நம் மனங்களை ஆள்வான் --எங்கும்
மங்கலம் பொங்கிட அதனை தங்கிடச் செய்வான்
பயமேதும் இல்லையே பணிந்தவர் தமக்கே --அவனை
பாடிடப் பாடிட நல்லப் பலனுண்டு நமக்கே (அழகிய )
சிவபாலன் குருநாதன் செந்தூரில் வேலன் --அவனை
சிந்தையில் வைத்திட செல்வங்கள் நிறையும்
புவனங்கள் ஆள வந்த எங்கள் புண்ணிய மூர்த்தி --தினம்
புகழ்ந்து பாடிட நமக்கு வந்திடும் கீர்த்தி
அழகிய தோளினன் அன்பினில் சீலன் --நாம்
அனுதினம் வணங்கிட அருள் தரும் பாலன் (அழகிய )
அனுபல்லவி
பழமுதிர் சோலையில் சிவப் பழமென முருகன் --அவனை
பணிந்திட வரம் தரும் பரம தயாளன் (அழகிய )
சரணங்கள்
நினைத்தவர் நெஞ்சினில் நிலையாய் இருப்பான் --நாம்
நேர்வழி நடந்திட துணையாய் வருவான்
வினைகளை அழித்து நல் வெற்றிகள் தருவான் --தன்னை
வேண்டிடும் மாந்தர்க்கு தூண்டுதல் புரிவான் (அழகிய )
இதம் தரும் சொல்லினால் ஏழையைக் காப்பான் --அவரது
இன்னல்கள் நீக்கி வாழ்வில் நன்னலம் சேர்ப்பான்
உதவிகள் கேட்டிடில் உடன் ஓடியே வருவான் --அந்த
உத்தமன் சத்தியன் நாம் நித்தமும் தொழுவோம் (அழகிய )
மயிலினில் வந்தே நம் மனங்களை ஆள்வான் --எங்கும்
மங்கலம் பொங்கிட அதனை தங்கிடச் செய்வான்
பயமேதும் இல்லையே பணிந்தவர் தமக்கே --அவனை
பாடிடப் பாடிட நல்லப் பலனுண்டு நமக்கே (அழகிய )
சிவபாலன் குருநாதன் செந்தூரில் வேலன் --அவனை
சிந்தையில் வைத்திட செல்வங்கள் நிறையும்
புவனங்கள் ஆள வந்த எங்கள் புண்ணிய மூர்த்தி --தினம்
புகழ்ந்து பாடிட நமக்கு வந்திடும் கீர்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக